வைகோ., தோளில் மீண்டும் கருப்புத் துண்டு போடக் காத்திருக்கும் நாஞ்சிலார்!

nanjil sampath new 19305 - 2026

மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத் இணைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. அதற்குக் காரணம்,  நாஞ்சில் சம்பத் கூறியுள்ள சில புகழுரைகள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பிதாமகன் கதாநாயகன் வைகோதான் என்று கூறியுள்ள நாஞ்சில் சம்பத், தேவைப்பட்டால் மீண்டும் வைகோவோடு மக்கள் போராட்டங்களில் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்துள்ளார்.

நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடியதும் தூத்துக்குடி மக்கள் வைகோவுக்கு விழா எடுப்பார்கள் என்று நாஞ்சில் சம்பத் கூறுவதில் இருந்து, இப்போதே வைகோ பக்கத்தில் ஒரு துண்டு போட்டு விட்டுக் காத்துக் கிடக்கிறார் நாஞ்சில் சம்பத் என்ற பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.

அதிமுக.,வில் இணைந்து இன்னோவா சம்பத் என்று பேர் வாங்கியவர், பின்னர் அதிமுக., தினகரன் அணி என்று ஒட்டிக் கொண்டிருந்தவரை, ஒரு மாதிரியாகப் பேசி வந்தார். தினகரன் தனிக் கட்சி, தனிக் கொடி என்று தனிப் பயணம் மேற்கொண்ட போது, கட்சிக் கொடியில்  அண்ணாவையும், கட்சிப் பெயரில் திராவிடத்தையும் தேடிப் பார்த்துக் களைத்துப் போய், இனி கட்சி அரசியலே வேண்டாம் என்று அரசியல் துறவறம் பூண்டுவிட்ட நாஞ்சில் சம்பத்,  அதன் பின்னர் இலக்கியக் களனில் புகுந்து, இலக்கிய இளம்பயிர்களை வளர்க்கப் போகிறேன் என்று சபதம் எடுத்தார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

ஆனால் இப்போது மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கேற்ப, தொடக்கத்தில் பேர் கொடுத்த கட்சியில் முடிவுரை எழுதப் புறப்பட்டு விட்டாரோ என்று சந்தேகப் படும் விதமாய் வைகோ குறித்து புகழுரையைக் கிளறி, ஊடக உலகில் அரசியல் புயலைக் கிளப்பி விட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories