வைகோ., தோளில் மீண்டும் கருப்புத் துண்டு போடக் காத்திருக்கும் நாஞ்சிலார்!

nanjil sampath new 19305 - 2026

மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத் இணைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. அதற்குக் காரணம்,  நாஞ்சில் சம்பத் கூறியுள்ள சில புகழுரைகள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பிதாமகன் கதாநாயகன் வைகோதான் என்று கூறியுள்ள நாஞ்சில் சம்பத், தேவைப்பட்டால் மீண்டும் வைகோவோடு மக்கள் போராட்டங்களில் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்துள்ளார்.

நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடியதும் தூத்துக்குடி மக்கள் வைகோவுக்கு விழா எடுப்பார்கள் என்று நாஞ்சில் சம்பத் கூறுவதில் இருந்து, இப்போதே வைகோ பக்கத்தில் ஒரு துண்டு போட்டு விட்டுக் காத்துக் கிடக்கிறார் நாஞ்சில் சம்பத் என்ற பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.

அதிமுக.,வில் இணைந்து இன்னோவா சம்பத் என்று பேர் வாங்கியவர், பின்னர் அதிமுக., தினகரன் அணி என்று ஒட்டிக் கொண்டிருந்தவரை, ஒரு மாதிரியாகப் பேசி வந்தார். தினகரன் தனிக் கட்சி, தனிக் கொடி என்று தனிப் பயணம் மேற்கொண்ட போது, கட்சிக் கொடியில்  அண்ணாவையும், கட்சிப் பெயரில் திராவிடத்தையும் தேடிப் பார்த்துக் களைத்துப் போய், இனி கட்சி அரசியலே வேண்டாம் என்று அரசியல் துறவறம் பூண்டுவிட்ட நாஞ்சில் சம்பத்,  அதன் பின்னர் இலக்கியக் களனில் புகுந்து, இலக்கிய இளம்பயிர்களை வளர்க்கப் போகிறேன் என்று சபதம் எடுத்தார்.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

ஆனால் இப்போது மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கேற்ப, தொடக்கத்தில் பேர் கொடுத்த கட்சியில் முடிவுரை எழுதப் புறப்பட்டு விட்டாரோ என்று சந்தேகப் படும் விதமாய் வைகோ குறித்து புகழுரையைக் கிளறி, ஊடக உலகில் அரசியல் புயலைக் கிளப்பி விட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories