கார், டூ வீலர்களின் விலை நாளை முதல் உயர்கிறது!

Published:

04 June14 car - 2026

புது தில்லி: நாளை முதல் கார், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது. அதற்கு மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப் பட்டுள்ளதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டை கட்டாயமாக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இதை அடுத்து புதிய கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாண்டு காப்பீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.5 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை கார் விலை உயருகிறது. அதே போல், இருசக்கர வாகனங்களின் விலையும் ரூ.1000 முதல் 13 ஆயிரம் வரை விலை உயருகிறது. வாகன இஞ்சின் சிசி ஆற்றலுக்கு ஏற்ப இந்த விலை உயர்வு இருக்கும்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img