மிஸ்டர் பரஞ்சோதி… பொருட்காட்சிக்கு சுவாமி விக்ரகங்களைக் கொண்டு போகலாம் என எந்த ஆகமத்தில் சொல்லப் பட்டது..?

swami purappadu - 2026

நெல்லை: தாமிரபரணி மகாபுஷ்கரம் இப்போது சூடுபிடித்துள்ளது. சாதாரணமாக வரும் ஆன்மிக நிகழ்வு என்றால் பெரிதாக செய்திகளில் இடம்பெறாது. ஆனால், புஷ்கரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ, கிறிஸ்துவ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையால் ஊடக வெளிச்சம் படர்ந்தது புஷ்கரத்துக்கு!

அடுத்த பரபரப்பு கிளப்பி, மேலும் சூடுபிடித்துள்ளது புஷ்கரம். இதற்குக் காரணமாக அமைந்தவர் கலெக்டர் பெயரில் சுற்றறிக்கை அனுப்பிய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி!

இதை அடுத்து விளக்கம் கொடுத்துள்ளனர் அறநிலையத்துறை அதிகாரிகள். நீர்ச் சுழல் இருக்கும், நெல்லை மாநகராட்சி எல்லையில் வரும் இரு படித்துறைகளான குறுக்குத்துறை, சிஎன் கிராமம் தைப்பூச மண்டபம் இரண்டு நீங்கலாக மற்ற படித்துறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆட்சியர் கூறியுள்ளதாக விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.

அடுத்தது, ஆகம விதிகளின் படி, தீர்த்தக் கட்டங்களுக்கு ஆலயங்களின் சுவாமி விக்ரகங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று சுற்றறிக்கையில் பரஞ்சோதி குறிப்பிட்டுள்ளார். இது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  வேளச்சேரி - பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

மூர்த்தி தலம் தீர்த்தம்… இவை மூன்றும் ஆன்மிகத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. மூன்றும் இருந்தால்தான் வழிபாடு நிறைவுபெறும்.

தற்போது தீர்த்தக் கட்டமான தாமிரபரணியில் புஷ்கர விழா வருகிறது. அதற்கு தலத்தின் முக்கிய சுவாமியான மூர்த்தி எழுந்தருளக் கூடாது என்று தடைவிதிக்க அறநிலையத்துறை இணை ஆணையர் யார் என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

தீர்த்தக் கட்டத்துக்கு சுவாமி விக்ரஹங்களை எழுந்தருளச் செய்யக் கூடாது; ஆகமத்தில் இடமில்லை; ஆகம விரோதம் என்றெல்லாம் கூறியுள்ள பரஞ்சோதி, கடந்த 3 வருடங்களுக்கு முன் 2015ல் சென்னையில் நடைபெற்ற பொருட்காட்சித் திடலுக்கு சுவாமி விக்ரகங்களைக் கொண்டு போகச் சொல்லி, அந்த அந்தப் பகுதி உதவி ஆணையர்களுக்கும் செயல் அலுவலர்களுக்கும் கையெழுத்திட்டு அனுப்பிய சுற்றறிக்கையை வெளியிட்டு, இது எந்த ஆகமத்தில் வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொருள்காட்சிக்கு ஒரு காட்சிப் பொருளாக கோயில் விக்ரகங்களை அனுப்பி, கலெக்சன் பார்த்த இணை ஆணையர், ஓர் ஆன்மிக நிகழ்வான தீர்த்தவாரிக்கும் சடங்குகளுக்கும் படித்துறைகளுக்கு சுவாமி விக்ரகங்கள் செல்வது ஆகம விரோதம் என்று சொல்கிறார் என்றால், அவர் மனத்தில் எவ்வளவு வஞ்சம் புரையோடிப் போயுள்ளது என்று குமுறுகின்றனர் நெல்லை வாழ் அன்பர்கள்.

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பரஞ்சோதி உண்மையில் அறநிலையத்துறையில் இருப்பதற்கு லாயக்கற்றவர் என்பது மட்டுமல்ல, அவர் உடனடியாக இந்தக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மாற்றல் வாங்கிச் சென்றுவிட வேண்டும் அல்லது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.

paranjodhi dc hrnce statement - 2026

circular hrnce2 - 2026

circular hrnce1 - 2026

 

2015-பிப்.12ம் தேதி நமது தினசரியில் வெளியிட்ட செய்தி…: பொருட்காட்சி வளாகத்தில் உத்ஸவர் புறப்பாடு நடத்தலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories