தாமிரபரணி புஷ்கர விழா, துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Published:

pushkar1 - 2026

அம்பாசமுத்திரம்: தாமிரபரணியில் புஷ்கர விழா மற்றும், புஷ்கரத்தை ஒட்டிய துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தாமிரபரணியின் முதல் படித்துறையில், தாமிரபரணி புஷ்கர விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு, அகில பாரத துறவிகள் மாநாட்டினை சங்கு முழங்க அகிலானந்தா மகரிஷி  கொடியேற்றியும் அகல விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இன்று மகா பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் துறவிகள் நீராடி பகவானை தரிசித்து வருகின்றனர். மேலும் இந்த மகா புஷ்கர நிகழ்விற்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை சுமார் 9 மணி அளவில் அகில பாரத துறவிகள் மாநாடு தொடங்கப்பட்டது. அகில் அகிலானந்த மகரிஷி கொடி ஏற்றியும், அகல் விளக்கு ஏற்றியும் இந்த விழாவை தொடங்கி வைத்தார்

இப்பகுதியில் தற்போது பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த மகா புஷ்கரம் விழாவானது இன்று தொடங்கி வருகின்ற 22 10 2018 வரை தொடர்ந்து நடைபெற இருப்பதால் பக்தர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஒவ்வொரு நாளும் அகில பாரத துறவிகள் மாநாடு சார்பாக மாபெரும் அன்னதானம் மற்றும் ஒவ்வொரு நாளும் இசை நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது

இன்று மாலை 6 மணிக்கு மேல் தாமிரபரணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தீப விளக்கு காட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று முற்பகல், தமிழக ஆளுநர் வந்திருந்து, புஷ்கர விழாவை தொடக்கிவைக்கிறார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img