ராஜபட்ச நியமனத்தில் இந்திய அரசுக்கோ பாஜக.,வுக்கோ துளியும் சம்பந்தம் இல்லை!

Published:

la ganesan - 2026
Picture: File Copy

இலங்கை பிரதமராக ராஜபட்ச நியமிக்கப் பட்டதில், இந்திய அரசுக்கோ, பாஜக.,வுக்கோ துளியும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார் தமிழக பாஜக., மூத்த தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ள கருத்து…

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது இன்னொரு நாட்டின் பிரச்சினை என்று ஒதுக்கிவிட முடியவில்லை. ராஜபக்சே தமிழர்கள், தமிழர் நலனுக்கு எதிரானவர் என்றும், இலங்கை இனப்படுகொலைக்கு முக்கிய பங்கு வகிப்பவர் என்றும் அனைவரிடத்திலும் ஒரு எண்ணம் உண்டு. அது வெறும் எண்ணம் மட்டுமல்ல, உண்மையும் கூட.

ராஜபக்சே எதனால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்? என்பதற்கான உரிய விளக்கத்தை இலங்கை அரசு தெரிவித்தாக வேண்டும். பிரதமராக ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டதில் இந்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது இன்னொரு நாட்டின் விவகாரம். இதில் பா.ஜ.க.வையோ, பிரதமரையோ, இந்திய அரசாங்கத்தையோ தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img