February 23, 2026, 3:36 AM
25.9 C
Chennai

அதிமுகவின் ஆதரவால் அரசு வழக்கறிஞரான எம்.எல்.ஜெகன் திமுகவில் இணைகிறாரா ?

 
கடந்த சிலமாதங்களுக்கு முன் விகடனில் வெளியான கட்டுரையை அறிக்கையாக வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.விசாரணைக்காக கருணாநிதி, காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானர். கருணாநிதியுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
அப்போது வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளரும் உயர்நீதிமன்ற குற்றபிரிவு அரசு வழக்கறிஞருமான எம்.எல் ஜெகன் இன்று உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை வாழ்த்தி வணங்கி வரவேற்றார். பதிலுக்கு கலைஞர் குலம்விசாரித்து மனம் நேகிழ்ந்தார்.திமுக மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு மூலம் வழக்கறிஞர் எம்.எல் ஜெகன் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினிடம் நன்கு அறிமுகமானவர்.
 
இந்த நிலையில் எம்.எல் ஜெகன் திமுகவில் இணைய இருப்பதாகவும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அவருக்கு திமுகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட பி.கே.சேகர்பாபு மூலம் டிக்கட் ரெடியாகிவிட்டதாக எனும் கேள்வியுடன் தகவல் வாட்ஸ்ஆப்பில் வைரலாக
பரவிவருகிறது.
 
அத்துடன் வழக்கறிஞர் எம்.எல் ஜெகன் எப்போதோ ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படமும், அவர் இன்று நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை வாழ்த்தி வணங்கி வரவேற்ற புகைப்படமும், பரவிவருகிறது. அதிமுகவின் ஆதரவால் அவருக்கு எம்.எல் ஜெகனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கிடைத்ததாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது .
 
முதலமைச்சர் ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு தொடர்ந்த அவதூறு வழக்கை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories