கடந்த சிலமாதங்களுக்கு முன் விகடனில் வெளியான கட்டுரையை அறிக்கையாக வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.விசாரணைக்காக கருணாநிதி, காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானர். கருணாநிதியுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளரும் உயர்நீதிமன்ற குற்றபிரிவு அரசு வழக்கறிஞருமான எம்.எல் ஜெகன் இன்று உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை வாழ்த்தி வணங்கி வரவேற்றார். பதிலுக்கு கலைஞர் குலம்விசாரித்து மனம் நேகிழ்ந்தார்.திமுக மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு மூலம் வழக்கறிஞர் எம்.எல் ஜெகன் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினிடம் நன்கு அறிமுகமானவர்.
இந்த நிலையில் எம்.எல் ஜெகன் திமுகவில் இணைய இருப்பதாகவும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அவருக்கு திமுகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட பி.கே.சேகர்பாபு மூலம் டிக்கட் ரெடியாகிவிட்டதாக எனும் கேள்வியுடன் தகவல் வாட்ஸ்ஆப்பில் வைரலாக
பரவிவருகிறது.
அத்துடன் வழக்கறிஞர் எம்.எல் ஜெகன் எப்போதோ ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படமும், அவர் இன்று நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை வாழ்த்தி வணங்கி வரவேற்ற புகைப்படமும், பரவிவருகிறது. அதிமுகவின் ஆதரவால் அவருக்கு எம்.எல் ஜெகனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கிடைத்ததாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது .
முதலமைச்சர் ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு தொடர்ந்த அவதூறு வழக்கை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.



