December 6, 2025, 9:59 AM
26.8 C
Chennai

திருவாரூருக்கு மட்டும் தேர்தல்..?! ஸ்டாலின் கேள்வியும் அதற்கான பதிலும்!

stalin int - 2025

ஸ்டாலின் பேசியதாக இன்றைய தினமணியிலிருந்து:
//திருவாரூருக்கு மட்டும் தேர்தல்.ஏதோ சூட்சமம் உள்ளது//

வழக்குகளோ, நீதிமன்றத் தடைகளோ இல்லையென்றால் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதி ஆறு மாதத்திற்குள் தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது சட்டம். கருணாநிதி காலமானது ஆகஸ்ட் 7 .பிப்ரவரியில் ஆறுமாத காலம் முடிகிறது. ஜனவரி இறுதியில் தேர்தல். இதில் என்ன சூட்சமம் இருக்க முடியும்?

//திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு முன்வராமல் திருவாரூருக்கு மட்டும் அவசரப்பட்டு நடத்துவதற்கு என்ன காரணம்?//

திருப்பங்குன்றத்தில் 2016 தேர்தலில் போட்டியிட்ட திமுக வேடபாளர் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என்றும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இப்போது தேர்தல் நடத்தி அதில் வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நீதிமன்றம் 2016ல் போட்டிபிட்ட திமுக வேட்பாளின் கோரிக்கையை ஏற்று அவரை வெற்றி பெற்றவராக அறிவித்தால் என்ன ஆகும்? ஒரு தொகுதிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க முடியுமா? அங்கு தேர்தல் நடக்காததற்கு திமுக் வேட்பாளரின் வழக்குதான் காரணம். அதை அவர் விலக்கிக் கொண்டிருந்தால் நடந்திருக்கலாம்.

//தேர்தல் ஆணையம் மத்திய அரசு மாநில அரசு எல்லாமே ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு சதியாக ஏற்கனவே 18 சட்டப் பேரவை உறுப்பினர்களுடைய பதவிகளை நீக்கியுள்ளன//

18 பேரை தகுதி நீக்கம் செய்தவர் சட்டப் பேரவைத் தலைவர். அது சரி என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதில் மத்திய அரசு எங்கு வந்தது? தேர்தல் ஆணையம் எங்கு வந்தது? 

சட்டப் பேரவை தலைவரின் தீர்ப்பை விமர்சிப்பது உரிமை மீறல். நீதிமன்ற தீர்ப்பிற்கு உள் நோக்கம் கற்பிப்பது நீதிமன்ற அவமதிப்பு. அவற்றைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. அதில் அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் கவனம் செலுத்தக் கூடும். நம் கவலை எல்லாம் ஒரு விவரம் அறியாத ஆரம்ப நிலை பேச்சாளர் வேண்டுமானால் இப்படிப் பேசலாம். அரசியலில் அனுபவம் வாய்ந்த ஸ்டாலின் பேசலாமா? வியப்பாக இருக்கிறது.

  • பத்திரிகையாளர் மாலன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories