மது விலக்கை அமல் படுத்தாததால் திமுக கூட்டணியிடம் அதிமுக ஆட்சியை பறி கொடுக்கும்! : ராஜநாயகம்

Published:

 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், தெரியவந்துள்ளது.
 
மக்கள் ஆய்வகம் தலைவர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
எங்களது அமைப்பினர்க டந்த சில மாதங்களாக 120 தொகுதிகளில் பல்வேறு மக்களிடம் கருத்துக்கள் கேட்டு ஆய்வு நடத்தினர். வருகிற சட்டமன்ற தேர்தலில், கூட்டணி குறித்து இன்னமும் முடிவாகாத நிலையில் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பீர்கள் என்ற கேள்வியை கேட்டோம். அதிமுகவுக்கு ஆதரவாக 33 .3 சதவீதத்தினரும் , திமுக வினருக்கு 33.1 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் .
மேலும் திமுக கூட்டணிக்கு 37.7 சதவீதத்தினரும், அதிமுக கூட்டணிக்கு 35. 7 சதவீதத்தினரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர் .தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. மேலும் மது விலக்கு முக்கிய பிரசாரமாக எடுத்து வைக்கப்படுகிறது.
 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் தி.மு.க தலைமையில் ஆட்சி அமையும் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் கூறினார்.
ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img