போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு … மனக் குமுறலுடன் சில கேள்விகள்!

teachers strike - 2026

நான் அரசுப் பள்ளியில் பயின்றவன். பல நல்ல ஆசிரியர்களை நேரில் பார்த்தவன். ஆனால் இன்றைய நிலையில் நல்லாசிரியர் என்போர் நூற்றுக்கு பத்து கூட இல்லை என்பது வேதனையான உண்மை.

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டம் தொடர்பாக சில கேள்விகள்…

*1. ஒன்பது அம்ச கோரிக்கை என்று சொல்கிறீர்கள். 7 அம்ச கோரிக்கை என்ன?

*சபரிமலையில் பத்து வயதிற்கு மேல் 50 வயதிற்கு கீழ் உள்ள பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தானே

*இந்தக் கோரிக்கையை இந்தப் போராட்டத்தில் எதற்காக திணித்து உள்ளீர்கள்?

*இந்தப் போராட்டத்திற்கும் இந்த கோரிக்கைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?. இது இந்துக்களின் உணர்வுகளை மதிக்காதது மட்டுமல்லாமல் புண்படுத்தும் செயல் என்பது தெரிந்தும் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததன் உள்நோக்கம் என்ன?

*2. இன்றைய 90 சதவீத ஆசிரியர்கள் சரியாகத்தான் பாடம் நடத்துகிறார்கள் என்று சொல்கிறீர்களா? அப்படி நீங்கள் சொல்வதாக இருந்தால் ஆசிரியப் பெருமக்கள் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை?

*ஆசிரியர்களுக்கு இந்த விஷயத்தில் வக்கலாத்து வாங்கும் அரசு ஊழியர்கள் ஏன் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வில்லை? ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திருந்தால் அரசு பள்ளிகளை மூடும் நிலை வருமா?

*இந்தக் காரணத்தை வலியுறுத்தி என்றாவது தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்களா? போராடி இருக்கிறீர்களா?

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

*உங்களிடம் பயின்ற அனுபவம் மிகக்குறைவான ஆசிரியர்கள், பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில் உங்கள் வீட்டு குழந்தைகளை சேர்க்கிறீர்களே இதன் பொருள் என்ன?

*உங்களிடம் பயின்றவர்கள் அறிவாளிகள் என்று சொல்கிறீர்களா? அல்லது உங்களிடம் பயின்றவர்களைவிட நீங்கள் திறமை இல்லாதவர்கள் என்று சொல்கிறீர்களா? அல்லது வாய்ப்பு, வசதிகள், திறமைகள் இருந்தும் பாடம் நடத்தவில்லை என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

*3. லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு மூலகாரணமே அரசு ஊழியர்கள்தான். ஒன்று அவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். அல்லது லஞ்சம் வாங்குபவர்களுக்கு துணை போகிறார்கள்.

*லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எதிராக என்றாவது போராடி இருக்கிறீர்களா? உங்களுக்கு சமுதாய அக்கரை கிடையாதா?

*4. பன்னிரண்டாம் வகுப்பு வரை உங்களின் குழந்தைகளை பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் நீங்கள், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற மேற்படிப்பில் மட்டும் அரசு கல்லூரிகளில் சேர்கிறீர்களே ஏன்? அந்த அரசு கல்லூரிகளில் பாடம் நடத்துபவர்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

*அவர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள நீங்கள்… உங்களில் 10% நல்லாசிரியர்கள் இன்னமும் திறமையான மாணவர்களை உருவாக்கும்போது, நீங்களும் திறமையான மாணவர்களை ஏன் உருவாக்கவில்லை. இதன் பெயர் திறமையின்மையா? அல்லது சோம்பேறித்தனமா?

*5. மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் காலகட்டத்தில் போராட்டம் அறிவித்து, அதனை முழுவீச்சில் செயல்படுத்தும் உங்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் அதை நம்பும் அளவிற்கு மக்கள் என்ன மடையர்களா?

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

*6. கம்யூனிஸ்டுகளின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக வருங்கால சமுதாயத்தை சீரழிக்கும் வகையில்… அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகின்ற வகையில் தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்துவது ஆசிரியர் பணிக்கு அவமானமில்லையா? ஆசிரியர் பணிக்கு இது இழுக்கு என்பது தங்களுக்குத் தெரியாதா?.

*7. நீங்கள் மிகவும் திறமையானவர்கள் என்று நம்புகின்ற தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் சம்பளம் உங்களை விட எத்தனை மடங்கு குறைவு என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

*8. நீங்கள் இதுவரை நடத்திய போராட்டங்களில் சம்பள உயர்வு கோரிக்கை இல்லாத ஒரு போராட்டத்தை உங்களால் சொல்ல முடியுமா?. அதாவது மாணவர் நலம் சார்ந்த அல்லது கல்வி தரம் உயர்வு சார்ந்த அல்லது பாடத்திட்டம் சார்ந்த ஏதாவது கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தி எப்போதாவது நீங்கள் போராடியது உண்டா?

*9. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களாகிய உங்களின் குடும்பத்தில், காவல்துறை போன்ற இதர துறைகளில் வேலை பார்ப்பவர்களின் பணி மற்றும் அவர்களின் சம்பளம் போன்றவற்றுடன் உங்களது சம்பளம் மற்றும் பணியை ஒப்பிட்டு பார்த்தது உண்டா?

*அவர்களைவிட உங்களுக்கு பணி சுமை அதிகம் என்று சொல்கிறீர்களா? அவர்களை விட உங்களுக்கு ஊதியம் குறைவு என்று சொல்கிறீர்களா?

*10. பொதுவாக ஒரு பணியில் இருப்பவர் அந்தப் பணி தனக்கு பிடிக்காமல் போனாலோ அல்லது அவருக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் குறைவாக இருக்கிறது என்று அவர் நினைத்தாலோ உடனடியாக அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு விருப்பமான இடத்தில், பிடித்தமான வேலையில் சேர்வதுதானே நடைமுறை. அதுதானே சரியானதும்கூட. நீங்கள் ஏன் அந்த வழிமுறையை தேர்வு செய்யவில்லை?

ALSO READ:  இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்... என்ன நடக்குது இங்கே!

*நீங்கள் இப்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு எங்கு சென்றால், இதைவிட அதிகமான சம்பளம் உங்களுக்கு கிடைக்காது என்பது உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள்…

*அப்படியானால் நீங்கள் இப்போது வாங்குகின்ற சம்பளம் குறைவா? அல்லது உங்களின் வேலைப்பளு அதிகமா?

குறிப்பு: மாணவர்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களுடைய வாழ்க்கையையே ஆசிரியர் பணிக்காக தியாகம் செய்து வருகின்ற மொத்த அரசு ஆசிரியர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மிக சாமானியனான எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றிகள்.

*நீங்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியமான உடல் நிலையோடும், நீடித்த மன மகிழ்ச்சியோடும் வாழ வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்

வந்த பதிவு : சாலமோன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories