January 25, 2025, 8:50 AM
23.2 C
Chennai

முல்லைப் பெரியாறு: கேரள இடையூறைத் தடுக்குமாறு தமிழக அரசு முறையீடு

Mullaiperiyar_dam புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளைத் தடுத்து இடையூறு விளைவிக்காமல் உள்ளே அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால மனுவில் … முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளை கேரள போலீஸார் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசின் அதிகாரிகள், வாகனங்கள் அப்பகுதிக்குச் செல்ல எந்த விதத் தடையோ, இடையூறோ ஏற்படுத்தக் கூடாது என்று கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் வழியில் வனப் பகுதியில் உள்ள “முல்லைப் பெரியாறு அணை-வல்லக்கடவு’ சாலையை சீரமைக்குமாறு உச்ச நீதிமன்றம் 2012, ஜூலை 23-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உடனே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் – என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தனது தீர்ப்பை உறுதிப் படுத்திய பின்னர், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு முன்னிலையில் தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் செயல்படுத்தச் சென்றனர். அப்போது கேரள அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவுக்கு மத்திய அரசும், கேரள அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

ALSO READ:  அமெரிக்காவின் 47வது அதிபர் ஆனார் ட்ரம்ப்; பெரும்பான்மை பெற்று சாதனை! மோடி வாழ்த்து!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.