பொய்யான செய்திகளை உடனடியாக கண்டுபிடித்து, அதற்கு உரிய பதில்களை பதிவு செய்வதற்காக, தேசிய மீடியாபகுப்பாய்வு அமைப்பை, உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை, டில்லி ஜவஹர்லால்நேரு பல்கலையில், தேச விரோத கோஷமிட்ட பிரச்னை போன்றவை, மிகப் பெரிய போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தவறான, பொய்யான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கவும், அதனால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் இந்த புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


