வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரி சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டம் நடைபெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் பேரவையைக் கூட்ட ஆளும் என்ஆர் அரசு திட்டமிட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் பேரவைக் கூட்டத்தை 2 நாள்கள் நடத்த முடிவு செய்துள்ளனர். முதல் நாளில் நிதிச்செலவினத்துக்கான ஒப்புதலைப் பெறுவது, இரண்டாவது நாளில் 25 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எல்.ஏவாக உள்ள வல்சராஜுக்கு பாராட்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள்


