கோவை கோவைப்புதூரில் தனியார் கல்லூரியில் அடிப்படை வசதிகோரி 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். காவல்துறையின் தடையை மீறி உள்ளே நுழைந்த மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் 3 மாணவர்கள் காயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


