தஞ்சை மாவட்டம் கருந்தட்டான்குடி அருகேயுள்ள பூக்குளம் பகுதியில் ஓம் ஸ்ரீ பஞ்சநத பாவாவின், நிர்விகல்ப சமாதி அமைந்துள்ளது.
பழமை வாய்ந்த அந்த அதிர்ஷ்டமான நிர்விகல்ப சமாதிக்குசென்று வழிபட்டு ஏதேனும் காரியம் நிறைவேற வேண்டிக் கொண்டால் அந்த காரியம் உடனே நிறைவேறுவதாக பக்தர்களால் கூறப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, வியாழக்கிழமை, சனிக்கிழமை போன்ற நாட்களில் அதிகமானோர் வழிபாடு செய்ய அங்கு செல்கின்றனர்.
சமாதி கோவிலின் வெளிப்பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் சேகரிக்கும் மையம் இயங்கி வருகிறது, அந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் அனைத்து பகுதியையும் ஆக்கிரமித்து எப்போதுமே இடையூறு அளிக்கும் வகையில் வெகுநாட்களாக செயல்பட்டு வந்துள்ளதாக பக்தர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
இடையூறு அளித்து வருபவர்களை பக்தர்கள் எவரேனும் தட்டிக் கேட்டால் அவர்களை ஊழியர்கள் எங்கேயோ இருந்து இங்கு வந்து எங்களை அதிகாரம் செய்யுறயா? என்று மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி வசை பாடுவார்களாம் .
இந்த நிலையில் இன்று (25-02-2016) சமாதி கோவிலுக்குள் எவரும் செல்ல முடியாதபடி சமாதியை ஆக்கிரமித்து விட்டனராம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர். இடையூறு அளித்ததை தட்டிக் கேட்ட பக்தர்களை அங்கிருந்த வாணிபக் கழக அதிகாரிகள் உட்பட ஊழியர்கள அனைவரும் ஒன்று சேர்ந்து வழக்கம்போல் வசைபாடி விரட்டியடித்தனராம்.
மேலும் சமாதியை ஆக்கிரமித்தது தொடர்பாக எங்கு வேண்டுமானாலும் போய் புகார் செய். எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என வாணிபக் கழக அதிகாரி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.



