கான்பூரில் சுப்ரமணியன் சுவாமி சென்ற கார்மீது போராட்டக்காரர்கள் முட்டை மற்றும் தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.
கான்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சுப்ரமணியன் சுவாமி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த போராட்டகாரர்கள் திடீரென அவர் சென்ற கார் மீது தக்காளி மற்றும் முட்டைகளை வீசினர்.
அவருக்கெதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், கருப்பு கொடியை ஏந்தி கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோஷமிட்டனர்.


