மத்திய அரசு ஊழியர்கள் பலருக்கு இந்தி பேச தெரிந்திருந்தாலும், அவர்கள் பணிபுரிவதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த குறைபாட்டை போக்குவதற்காக மத்திய அரசு நடத்தும் கடினமானது என கூறப்படும் பரன்கட் எனப்படும் இந்திய இலக்கிய புலமை படிப்பை படிக்க வேண்டும். 160 மணிநேரம் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பிற்கு பிறகு நடத்தப்படும் தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 பரிசும், 60-69
சதவீதம் மதிப்பெண் பெறும் ஊழியர்களுக்கு ரூ.8000 பரிசும், 55-59 சதவீதம் மதிப்பெண் பெறும் ரூ.6000 பரிசும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் அனுப்பி உள்ளது.
இந்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் 10 ஆயிரம் பரிசு
Popular Categories


