தமிழகம் முழுவதும் நடைபெறும் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனறிவு தகுதித் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுத உள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்க கூடிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனப் பள்ளி மாணவர்களுக்கு, தேசிய திறனறிவு தேர்வு மாநில அரசுகள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.
இதற்கான தகுதித் தேர்வை, தமிழகம் முழுவதும் 8ஆம் வகுப்பு படிக்க கூடிய ஒன்றரை லட்சம் மாணவர்கள் இன்று எழுதுகின்றனர். இந்தத்தேர்வு மூலம் 6000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதந்தோறும் 500 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த தேசிய திறனறிவு தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 525 தேர்வு மையங்களை தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.


