தேனி மாவட்டம் கம்பம் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேகமலை வனஉயிரியல் சரணாலயம், உத்தமபாளையம் வனபகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காட்டுத் தீயில் மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் மற்றும் அரிய வகை தரைவாழ் உயிரினங்கள், பறவைகள் உயிரிழந்து இருக்கக்கூடும் என வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


