அரசு மருத்துவமனையில் மருந்துகளை சுருட்டும் மருந்தாளுநர்கள்!

 

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கச் சொல்லும் மருந்துகளை மருந்தாளுனர்கள் முறையாகக் கொடுக்காமல் சுருட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் இலவச மருத்துவ சேவை திட்டம்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையை பொருத்தமட்டில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து பயன் பெறுகின்றனர்.

சில நிரந்தர வெளி நோயாளிகளுக்கு ஏழு நாட்கள், பதினைந்து நாட்கள், முப்பது நாட்களுக்கு ஒருமுறை என்கிற முறையில் மருந்துகளை வழங்க மருந்தாளுனர்களுக்கு அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

சில வெளி நோயாளிகளுக்கு மருந்து அளிக்க மருத்துவர்கள் உத்தரவிட்ட சீட்டினை அந்த மருத்துவமனை மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்களிடம் கொடுத்து மருந்தினை கேட்டால் நான்கு நாட்களுக்கு மட்டுமே ( மருந்து குறைவாக சரியான எண்ணிக்கை இல்லாமல் ) கொடுத்து விரட்டி விடுகின்றனராம்.

மருத்துவர்கள் பரிந்துரை செய்த நாட்களுக்கு ஏன் மருந்தினை கொடுக்க மறுக்கிறீர்கள்? என மருந்தாளுனர்களிடம் நோயாளிகள் கேட்டால் ஓசியில சிகிச்சை பெற்று மருந்து வாங்குகிற நீ எல்லாம் என்ன சட்டம் பேசுகிறாயா? என தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனராம்.

ஒரு சிலரிடம் நான்கு நாட்களுக்கு மேல் மருந்து கொடுக்கக் கூடாது என சட்டம் இருப்பதாக தெரிவித்தும் உள்ளனராம்.

அவர்கள் மீண்டும் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சென்று மருந்தாளுனர்கள் கூறியதைக் கூறி மருந்து வழங்க மறுக்கின்றனர் என முறையிட்டனராம்.

அதற்கு “மருத்துவர்களாகிய நாங்கள் நோயாளிக்கு எத்தனை நாட்களுக்கு மருந்து கொடுக்க சொல்கிறோமோ அதை சரியான எண்ணிக்கையில் கொடுப்பது மட்டுமே மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்களின் வேலை. ஆனால் மருந்தாளுனர்கள் எப்போதுமே நாங்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை நோயாளிக்கு கொடுப்பது இல்லை. அவர்கள் எப்பவுமே அப்படித்தான் செய்வார்கள். நாங்கள் என்ன செய்வது?” என மருத்துவர்களும் புலம்பினராம்.

நான்கு நாட்களுக்கு மேல் மருந்து கொடுக்கக் கூடாது என சட்டம் இருப்பதாக மருந்தாளுனர்கள் கூறும் நிலையில் மருத்துவர்கள் நோயாளிக்கு நான்கு நாட்களுக்கு மேல் மருந்து அளிக்க ஏன் சீட்டினை கொடுக்கின்றனர்?

நோயாளிக்கு நான்கு நாட்களுக்கு மேல் மருந்து அளிக்க மருத்துவர்கள் சீட்டினை எழுதி கொடுக்கக் கூடாது என ஏன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் தலைவர் உத்தரவு போடவில்லை?

மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்து அளிக்க உத்தரவிட்ட சீட்டினை மருந்தாளுனர்கள் பெற்றுக்கொண்டு மருந்து கொடுத்ததாக கணக்கு எழுதி மருந்தை குறைவாக கொடுத்தால் மருந்தாளுனர்கள் சுருட்டும் மருந்துகள் எங்கே செல்கிறது ? எனும் கேள்வியே அனைவர் மத்தியிலும் கட்டாயம் எழும்!

மருந்தாளுனர்களால் சுருட்டப்படும் மருந்துகள் எங்கே செல்கிறது என்பது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் தலைவருக்கு தெரியாமலா இருக்கப் போகிறது?

மக்களின் வரிபணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனையில் இன்னும் என்ன என்ன முறைகேடுகள் நடக்கிறதோ என்கிறது மதுரை மாநகரம்.

எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories