இதுகுறித்து ரயில்வே தரப்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில்,
புது டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள 9 டிக்கெட் கவுன்ட்டர்களில் பார் கோடிங் உள்ள ரயில் டிக்கெட்டுகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. இந்த புதிய முறையின் மூலம் ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை சமூக விரோதிகள் தாங்களாவே போலியாக தயாரித்து பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது.
இதனால் டிக்கெட்டுகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்பட்டு ரயில்வேயில் அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க இந்த சிஸ்டம் உதவுகிறது. படிப்படியாக நாடு முழுவதிலுமுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ‘பார் கோடிங்’ டிக்கெட் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


