தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம்: பிரேமலதா எச்சரிக்கை!

Premalatha Vijayakanth - 2026

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக., தனித்துப் போட்டியிடத் தயங்காது என்று கூறியுள்ளார் தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுக., கூட்டணியா, திமுக., கூட்டணியா என்று இன்னமும் பேரம் பேசிக் கொண்டிருக்கும் தேமுதிக., குறித்துதான் இப்போது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது. அதே நேரம், தேமுதிக.,வுக்கு வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு வலிமை இருப்பதை விட, அக்கட்சி தனித்து நின்றால் வாக்குகளைப் பிரித்து ஒரு வேட்பாளரை குறைந்த ஓட்டுகளில் தோல்வி அடையச் செய்யும் வலிமை உள்ளது என்பதுதான், இரு தரப்பும் தேமுதிக.,வின் பக்கம் பேரம் பேசிக் கொண்டிருக்கக் காரணம்.

இந்நிலையில், எந்தக் கூட்டணிக்கும் பிடிகொடுக்காமல், வைகோ.,வின் தூண்டுதலால் மக்கள் நலக் கூட்டணி தந்த மயான அடியில் இருந்து எழுந்திருக்கவே சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறது தேமுதிக.! மக்கள் நலக் கூட்டணியின் படுதோல்வியின் போதே, விஜயகாந்த் இனி மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அப்போதும், கூட்டணி விவகாரத்தில், பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் எடுத்த தவறான முடிவுகள் தான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர் கட்சியின் மூத்த தலைகள் சிலர்.

vijayakanth premalatha - 2026

இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி தந்த மறக்க இயலாத தோல்வியைத் தொடர்ந்து  திமுக., கூட்டணியில் முதல் ஆளாக துண்டு போட்டு வைத்தார் வைகோ! 2016 தேர்தல்  நேரத்தில், மானமுள்ளவன், ரோசமுள்ளவன், தமிழுணர்ச்சி செத்துப் போகாதவன் தான் திமுக.,வுடன் கூட்டணி வைப்பான் என்று பேசிக் கொண்டிருந்த வைகோ, தோல்விக்குப் பின்னர் திமுக.,வுடன் நெருங்கினார். கருணாநிதியின் மீது மீண்டும் பாசமழை பொழிந்தார்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

ஆனால் இந்தக் காட்சிகளை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அரசியல் வெகுளி என்றும் அப்பாவி என்றும் வர்ணிக்கப்பட்ட விஜயகாந்த். இப்போதும், திமுக., கூட்டணியில் அதே மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள்தான் காத்திருக்கின்றன. சிதம்பரம் தொகுதியில் தானே போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தனக்குத்தானே கூட்டணித்  தலைமை என்ற எண்ணத்தில் அறிவித்துக் கொண்டார்.

Vijayakanth STalin - 2026

இப்போது தேமுதிக.,வின் நிலைப்பாட்டுக்காக திமுக., காத்திருக்கிறது. வந்தால் என்ன செய்வது, வராவிட்டால் எப்படி பகிர்ந்து கொள்வது என்ற இரட்டை மனநிலையுடன் திமுக., கூட்டணிக் குழப்பத்தில் தவித்து மேற்கொண்டு முன்னேறாமல் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, திமுக.,வுக்கு அடி கொடுக்கும் விதமாக, ஸ்டாலின் சொன்னதை மாற்றிச் சொல்லி, எங்களுடன் திமுக., அரசியல் பேசியது. அப்படியே விஜயகாந்தின் உடல் நலமும் விசாரித்தார் ஸ்டாலின் என்று கூறி தூபம் போட்டிருக்கிறார். இதனால் நிச்சயம் திமுக.,வுக்குள் தன்மானம் சுயமரியாதை எல்லாம் பொங்கி தேமுதிக.,வை கழற்றிவிட யோசிக்கும் என்ற கருத்து பரவலாகியுள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அதேநேரம், இன்று தேமுதிக., மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசிய போது … மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கேட்டோம், ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

எனவே கட்சி இன்னமும் துடிப்புடன் இருக்கிறது.  கடந்த ஒரு தேர்தலை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு தேமுதிக.,வை எடை போடக் கூடாது! தேமுதிக.,வின் பலம் எங்களுக்கு நன்றாக தெரியும்!

நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமையும்! இல்லாவிட்டால், நாங்கள் தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம் என்று  கூறினார்.

எனவே தேமுதிக., மூன்றாவது அணி, அல்லது தனித்துப் போட்டி என்று களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. அதே போல், டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஆகியோரும் தனித்துக் களம் இறங்க முயன்று வருவதால், போட்டி பலமாகி, ஓட்டுக்கள் சிதறி  விடும் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories