வைகோ.,வின் பழைய பேச்சுகளால்… திமுக., கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள்!

vaiko pic - 2026

தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்புத் தலைவர் என்றால் அது வைகோதான் என்று ஆகிவிட்டிருக்கிறது.

மதிமுக., பொதுச் செயலர் வைகோ., துவக்க காலத்தில் திமுக.,வில் கொடிகட்டிப் பறந்தவர். மு.க.ஸ்டாலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்ற காரணத்தால் கொடி இறக்கப்பட்டு, திமுக.,வை விட்டு மு.கருணாநிதியால் அடித்துத் துரத்தப் பட்டவர். அப்போது முதல் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, திமுக.,வில் கருணாநிதி குடும்பத்தின் செல்வாக்கை முற்றிலும் நாசம் செய்வேன், திமுக.,வை கருவறுக்காமல் விடமாட்டேன் என்று சூளுரைத்து அரசியல் செய்து வந்தார்.

ஆனால் பின்னாளில் திமுக,.,வுடனேயே ஐக்கியமாகிவிடும் அளவுக்கு தன் அரசியல் வாழ்க்கையில் படுதோல்வியை சந்தித்துவிட்டவர் வைகோ.,! அதற்காக இவர் பலி கொடுத்தது அப்பாவி தொண்டர்களின் உயிர்களை!

மேடைக்குக் கீழே இவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தொண்டன் உணர்ச்சி தினவெடுக்க உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு மூளைச் சலவைக்கு உள்ளாகிவிடுகிறான். ஆனால் எதுவுமே நடக்காதது போல் தற்போது, திமுக.,வுடன் கைகோத்துள்ள வைகோ., இந்தத் தேர்தல் முடிந்ததும் தனது கட்சியை திமுக., வுடன் இணைத்து, தனது கட்சியில் உள்ள மறுமலர்ச்சியை வீழ்ச்சி அடையச் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

vaiko rajini daughter marriage1 - 2026

இந்நிலையில், கடந்த தேர்தலில் திமுக.,வுக்கு எதிராக நின்ற போதும், அதற்கு முன்பும் வைகோ பேசிய பேச்சுகள் தற்போது இணையங்களில் உலா வருகின்றன. அவ்வளவு பழைய வீடியோக்கள் கூட இல்லை… அண்மைக் கால அதுவும் ஓரிரண்டு வருடங்களுக்கு முந்தைய வீடியோக்கள் என்பதால், இந்த முறை வைகோ.,வை வெச்சி செய்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

திமுக., மட்டுமல்லாமல், ஈழத் தமிழரைக் கொன்ற கட்சி என்று காங்கிரஸையும், உடன் இருந்தே கொன்ற கட்சி என்று திமுக.,வையும் தொடர்ந்து மேடைகளில் பேசி வந்தார் வைகோ. அவரது பேச்சுகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

திமுக., கூட்டணியை அசைத்துப் பார்க்கும் வைகோ.,வின் பேச்சுகளை இப்போது ஒரு தரப்பினர் யுடியூப் உள்ளிட்ட இணையதளங்களில், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகம் வெளியிட்டு வருகின்றார்கள்.

sadhik basha - 2026

குறிப்பாக, சாதிக் பாட்சா மர்ம மரணம் குறித்து வைகோ கூறிய குற்றச்சாட்டுகள் இன்றளவும் மக்கள் மனத்தில் நீங்காமல் உள்ளது. அதை உறுதிப் படுத்துவது போல், 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்ஷா நினைவு நாளான நேற்று அவர்களின் குடும்பம் வெளியிட்டுள்ள நினைவஞ்சலி செய்தியில், கூடா நட்பு கேடாய் முடியும் என்று குறிப்பிட்டு… சாதிக் பாட்சா மரண விவகாரத்தில் ஸ்டாலினுக்கு உள்ள தொடர்புகளை அம்பலப் படுத்தும் வைகோ.,விடம் உள்ள ரகசிய கோப்புகளை தூசு தட்டச் சொல்லி விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்!

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நேற்று வரை ஸ்டாலினை கொலைகாரன், கொள்ளைக் காரன் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, இன்று ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்காக ஒட்டுமொத்த புரட்டையும் ஒட்டுமொத்தமாகத் தலைபுரண்டு புரட்சியையும் ஏற்படுத்தியிருக்கும் திராவிட இயக்கத்தின் மழுங்கிப் போன போர்வாள் வைகோ.,வை மீம்ஸ்களில் இணைத்து பொருமித் தள்ளுகிறார்கள் தமிழன் ரத்தம் உடம்பில் ஓடும் உண்மைத் தமிழர்கள்! அவற்றில் ஓர் உதாரண மீம்ஸ் இது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories