எடப்பாடியாரின் அதிரடி பதிலடி சவுக்கடிப் பேச்சுகளால்… அரண்டு போன திமுக., வட்டாரம்!

stalin edappadi - 2026

தனி நபர் தாக்குதல்கள், கொச்சைப் பேச்சுகள் ஏச்சுகளெல்லாம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று திமுக,வினர் நினைத்திருக்க, முதல்வர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் மொழியிலேயே பதிலடி கொடுக்க.. இப்போது அரண்டு போய்க் கிடக்கிறது திமுக., வட்டாரம்.

ஜெயலலிதா மரணத்தை வைத்தும், மத்திய அரசு மாநில அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை வைத்தும், திமுக., தனி நபர் தாக்குதல்களை அறுவறுக்கத்தக்க வகையில் நடத்தி வருகிறது. குறிப்பாக, அதிமுக., கூட்டணியில் இணைந்த அந்நாளே பாமக., ராமதாஸை பற்றி திமுக., தலைவரான ஸ்டாலின் பேசிய பேச்சுகள் அவர் மீது கடும் வெறுப்பையே ஏற்படுத்தின.

திமுக.,வில் வெற்றி கொண்டான் போன்ற நாலாந்தர பேச்சாளர்கள் தற்போது இல்லாததால், அந்த இடத்தை தானே இட்டு நிரப்ப கட்சித் தலைவர் ஸ்டாலின் முயன்று வருவதால், அவருக்கான எதிர்வினைகளை, அதே தகுதியில் இருக்கும் அதிமுக.,வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இறங்கியடிப்பது, இப்போது திமுகவினரை கலகலக்கச் செய்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் செயலின்மை போன்றவைகளையும் விமர்சித்து வாக்குகளைப் பெற முயற்சி செய்ய வேண்டிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தனிநபர் தாக்குதலாக மோடியின் சாதி, இனம், மொழி, குடும்பம் பற்றியெல்லாம் பேசியும், எடப்பாடியாரை அடிமை என்றும் கேவ்லமாகவும் பேசி வருவது ஸ்டாலினின் தகுதி தராதரத்தையே காட்டி வருகிறது.

edappadi pazanisay - 2026

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி பேசிய ஸ்டாலினுக்கு அதே விதத்தில் கருணாநிதி மரணத்தைப் பற்றி பேசி பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் பேசுவது நியாயம் என்றால், எடப்பாடியின் பேச்சும் நூறு சதவீதம் நியாயமானதுதான்.

இந்நிலையில், கருணாநிதியின் மறைவை எடப்பாடி பழனிசாமி கொச்சைப் படுத்துவதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்திருப்பதை எவரும் மனதில் ஏற்றுக் கொண்டு, அனுதாபத்தைக் காட்டவில்லை!

கருணாநிதியின் நினைவிடத்திற்கு கூட இடம் கொடுக்காத அதிமுகவினர், இப்போது கருணாநிதியின் மறைவையும் கொச்சை படுத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புலம்பியிருப்பதை எவரும் காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை!

stalin stage - 2026

நெல்லை மற்றும் சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய ஸ்டாலின், அங்கே பேசிய போது, காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னர் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இதனால் எரிச்சலடைந்துள்ள பா.ஜ.க.வினர், திமுகவை இந்துக்களின் எதிரி என தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதே திமுகவின் குறிக்கோள்!.

எந்த மதத்திற்கும் திமுக எதிரி இல்லை! சிலர் எதிர்ப்பதால் திமுக மத விரோதியாகவோ, தேச விரோதியாகவோ மாறி விடாது. இது போன்ற அவதூறுகளை தாண்டிதான் திமுக வளர்ச்சி அடைந்துள்ளது. அதிமுக ஆட்சியால் தமிழகம் எந்த நன்மையும் பெறவில்லை

தமிழகத்தின் நலனுக்காக 95 வயது வரை பாடுபட்ட கலைஞருக்கு நினைவிடம் அமைக்கக் கூட அதிமுக அரசு அனுமதி மறுத்தது! இப்போது கலைஞரின் மறைவையும் கொச்சை படுத்துகிறது என்று வேதனையுடன் புலம்பித் தள்ளினார்.

அது போல், முதலமைச்சர் வரம்பு மீறிப் பேசுவதை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று திருச்சி சிவாவும் கூறியுள்ளார்.

கலைஞருக்கு உடல்நலம் குன்றியபோது மிகவும் வெளிப்படையாக சிகிச்சை அளிக்கப்பட்டது! அது குறித்து முதலமைச்சர் வரம்பு மீறிப் பேசுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார்.

இந்த விதத்தில், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுவது தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும், தங்களை நோக்கி அதே போன்ற கேள்விகளும் விமர்சனமும் வரும்போது, ரவுடித்தனத்தையே வெளிப்படுத்துவோம் என்ற பாசிஸ வெறி பிடித்த சிந்தனையைக் கொண்டிருக்கிறது திமுக., என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories