“எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!”

“எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!”

(பெரியவாளைப் பார்த்து ஓர் இஸ்லாமியர்)

சொன்னவர்-எஸ்.கணேச சர்மா27072859 1843381352373688 8631597881839899516 n 2 - 2026

புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பெரியவா ஒரு முறை கரம்பக்குடியிலிருந்து
பட்டுக்கோட்டைக்குப் போனார். ஒரு கிழவர்
அவர் பின்னாலேயே ஓடிவந்தார். நல்ல வெயில்
காய்ந்து கொண்டிருந்தது. பெரியவா அவருக்காகவே
நின்றார்.அவரும் பழம்,புஷ்பங்களை பெரியவா
காலடியில் வைத்து தரிசனம் செய்தார்.

அவர் கரம்பக்குடியைச் சேர்ந்தவரென்று தெரிந்ததும்
பெரியவா, ” நான் இத்தனை நாள் அங்கேதானே
இருந்தேன்.அங்கேயே பார்த்திருக்கலாமே! எதற்கு
இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டு என் பின்னால்
வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்,”நான் அங்கேயும் பார்த்தேன் .அதனால்தான் உங்களைப் பிரிய மனமில்லாமல் ஓடி வரேன்”என்றார்.

‘இப்படிச் சொன்ன பெரியவர், ஓர் இஸ்லாமியர்!’

மேலும் அந்த இஸ்லாமியர், “என்னையும் மடத்தில்
சேர்த்துக் கொள்ளுங்கள்; எதைச் சொன்னாலும் செய்வேன் உங்கள் அருகிலேயே இருக்க ஆசைப்படுகிறேன்!”என்றார்.

சிரித்தபடியே பெரியவா,”உனக்கு என்னைப் பார்த்துக்- கொண்டே இருக்கணும்ணு தோணித்து என்றால் நீ இருக்கும் இடத்திலேயே இருந்து என்னை நினைத்துக்கொள். உன் நினைவில் நான் வந்தால் உன்னோடு இருப்பது போல்தானே!
அதற்காக மடத்திலெல்லாம் சேரவேண்டாம்!” என்றார்.

பெரியவருக்குக் கண்ணீர் பெரிகியது.

“எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!” என்றாராம்

இது போன்ற நிகழ்ச்சிகள்,பெரியவா பரமாத்மா என்பதற்கு சாட்சியாகின்றன.

1 COMMENT

  1. மனிதத்துக்கும் தெய்விகத்துக்கும் மதம் இல்லை. அல்லாஹ் ஒருவனே. ஹிந்து மதம் எனப்படும் சனாதன தர்மத்திலும் பரம்பொருள் ஒன்றே. ரிக் வேதத்திலும் ஓரிறைக் கொள்கை தான் வலியுறுத்தப் படுகிறது. வள்ளலார், குரு நானக் போன்றோரும் கடவுள் ஒருவனே என்று தான் சொல்லி உள்ளனர். காஞ்சி மஹான் பிறப்பால் பிராமணர் என்றாலும் பல மத தலைவர்களால் போற்றப்பட்டவர். பல மதங்களை அறிந்தவர். சங்கராச்சாரியார் போப்பையும் ஏக இறைவனையும் மதித்தார். இன்றுள்ளவர்கள் தான் மத வெறியில் சண்டை போடுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories