தமிழக அரசைக் குறை கூறுவதா?: ஆந்திர அரசுக்கு தமிழக அமைச்சர் பதில்

Published:

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் தீவிர சோதனையை அம்மாநில அரசு மேற்கொள்ள வேண்டும், சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தால், எங்களால் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மாநில அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி கருத்து தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக வனத்துறை அமைச்சர் ஆனந்தன், தமிழக வனப்பகுதிகளில் எந்த விதமான சட்டவிரோத செயல்களையும் தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆந்திர வனப்பகுதியில் சட்ட விரோதமான செயல்களை தடுக்க வேண்டியது ஆந்திர அரசின் பொறுப்பு. அதை விட்டுவிட்டு, தமிழக அரசைக் குறை கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து முதல் அமைச்சரிடம் கலந்தாலோசித்து உரிய அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img