ஈவேரா., அண்ணாத்துரை, கருணாநிதி மட்டும்தான் மரியாதைக்கு உரியவர்களா?!

dmk nalvar
dmk nalvar

முதல்வர்களுடன் ‘மோடி’ இன்று ஆலோசனை என்ற ஒரு செய்தியினை ஊடகங்களில் பார்க்க நேர்ந்தது. ‘மோடி என்று சொல்லக்கூடாதா, இதெல்லாம் ஒரு தவறா என்று மேலோட்டமாக பார்க்கும் போது தோன்றுகிறது. பிரதமரின் பெயரை சொல்வதினால் மரியாதை குறைவா? என்று சிலர் கேட்கக்கூடும். உறுதியாக இல்லை.

ஆனால், தமிழக ஊடகங்களில் ஈ.வெ.ரா அவர்களை பெரியார் என்றும், அண்ணாதுரை அவர்களை பேரறிஞர் அண்ணா என்றும், கருணாநிதி அவர்களை கலைஞர் என்றும் தான் அழைத்து கொண்டிருந்தார்கள், பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜாஜி அவர்களை குறிப்பிடும் போது மூதறிஞர் என்றோ, காமராஜர் அவர்களை குறிப்பிடும் போது பெருந்தலைவர் என்றோ, எம் ஜி ஆர் அவர்களை புரட்சி தலைவர் என்றோ, ஜெயலலிதா அவர்களை புரட்சி தலைவி என்றோ, குறிப்பிடாது இருப்பது ஏன்? ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தான் மரியாதைக்குரியவர்களா? புகழ் பெற்றவர்களா? மக்கள் ஏற்று கொண்ட தலைவர்களா?

கட்சியினர் தங்களின் தலைவர்களை புகழ்ந்து பேசி அவர்களை புகழ் பெற்றவர்களாக அழைப்பதில் தவறில்லை. ஆனால், ஊடகங்கள் கட்சி ரீதியாக, மாநில ரீதியாக எப்படி வித்தியாசமான நடைமுறையை கடைபிடிக்க முடியும்? திட்டமிட்ட ரீதியில் இது விதைக்கப்படுவதாக நான் கருதவில்லை. ஆனால் பெரும்பாலான ஊடகங்களின் வழக்கம் இப்படித்தான் இருந்து வருகிறது. தமிழக தலைவர்கள் அனைவருமே மரியாதைக்குரியவர்கள் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஆனால், சுயமரியாதை என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்களாக தங்களை காட்டிக்கொண்டவர்களை தான், சொந்த பெயரில் அழைக்காமல் பட்டப்பெயரில் அழைப்பது வழக்கமாகியுள்ளது. ஈ.வெ.ரா என்றாலோ, கருணாநிதி என்றாலோ, அண்ணாதுரை என்றாலோ, அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, கழக கொள்கையுடையவர்கள் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பாதுகாவலர்கள் என மார்தட்டிக்கொள்பவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களாக சொல்லப் படுபவர்களும், அவர்களை அவமரியாதையாக அழைத்து விட்டோம் என்று சற்றே கோபமாக பார்ப்பது, சுயமரியாதை சிற்பிகள் (?) என அழைக்கப் படுபவர்களின் தோல்வியாகவே நான் கருதுகிறேன்.

அப்படி இல்லையென பதிவிடுவார்களேயானால் இனி ‘மோடி’ என அழைக்காமல் ‘புதிய இந்தியாவை படைத்தவர்’ என்றோ ‘ஊழலை ஒழித்த உத்தமர்’ என்றோ, ‘உலகத்தின் எழுச்சி நாயகன்’ என்றோ அழைப்பார்களா?

என்னை பொறுத்த வரை மரியாதையோடு ஒருவரின் பெயரை சொல்லி அழைப்பது மட்டுமே அவர்களுக்கு செய்யும் மரியாதை, சிறப்பு என நான் எண்ணுகிறேன்.

  • நாராயணன் திருப்பதி (செய்தி தொடர்பாளர், பாஜக.,)
ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories