ஈவேரா., அண்ணாத்துரை, கருணாநிதி மட்டும்தான் மரியாதைக்கு உரியவர்களா?!

dmk nalvar
dmk nalvar

முதல்வர்களுடன் ‘மோடி’ இன்று ஆலோசனை என்ற ஒரு செய்தியினை ஊடகங்களில் பார்க்க நேர்ந்தது. ‘மோடி என்று சொல்லக்கூடாதா, இதெல்லாம் ஒரு தவறா என்று மேலோட்டமாக பார்க்கும் போது தோன்றுகிறது. பிரதமரின் பெயரை சொல்வதினால் மரியாதை குறைவா? என்று சிலர் கேட்கக்கூடும். உறுதியாக இல்லை.

ஆனால், தமிழக ஊடகங்களில் ஈ.வெ.ரா அவர்களை பெரியார் என்றும், அண்ணாதுரை அவர்களை பேரறிஞர் அண்ணா என்றும், கருணாநிதி அவர்களை கலைஞர் என்றும் தான் அழைத்து கொண்டிருந்தார்கள், பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜாஜி அவர்களை குறிப்பிடும் போது மூதறிஞர் என்றோ, காமராஜர் அவர்களை குறிப்பிடும் போது பெருந்தலைவர் என்றோ, எம் ஜி ஆர் அவர்களை புரட்சி தலைவர் என்றோ, ஜெயலலிதா அவர்களை புரட்சி தலைவி என்றோ, குறிப்பிடாது இருப்பது ஏன்? ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தான் மரியாதைக்குரியவர்களா? புகழ் பெற்றவர்களா? மக்கள் ஏற்று கொண்ட தலைவர்களா?

கட்சியினர் தங்களின் தலைவர்களை புகழ்ந்து பேசி அவர்களை புகழ் பெற்றவர்களாக அழைப்பதில் தவறில்லை. ஆனால், ஊடகங்கள் கட்சி ரீதியாக, மாநில ரீதியாக எப்படி வித்தியாசமான நடைமுறையை கடைபிடிக்க முடியும்? திட்டமிட்ட ரீதியில் இது விதைக்கப்படுவதாக நான் கருதவில்லை. ஆனால் பெரும்பாலான ஊடகங்களின் வழக்கம் இப்படித்தான் இருந்து வருகிறது. தமிழக தலைவர்கள் அனைவருமே மரியாதைக்குரியவர்கள் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால், சுயமரியாதை என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்களாக தங்களை காட்டிக்கொண்டவர்களை தான், சொந்த பெயரில் அழைக்காமல் பட்டப்பெயரில் அழைப்பது வழக்கமாகியுள்ளது. ஈ.வெ.ரா என்றாலோ, கருணாநிதி என்றாலோ, அண்ணாதுரை என்றாலோ, அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, கழக கொள்கையுடையவர்கள் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பாதுகாவலர்கள் என மார்தட்டிக்கொள்பவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களாக சொல்லப் படுபவர்களும், அவர்களை அவமரியாதையாக அழைத்து விட்டோம் என்று சற்றே கோபமாக பார்ப்பது, சுயமரியாதை சிற்பிகள் (?) என அழைக்கப் படுபவர்களின் தோல்வியாகவே நான் கருதுகிறேன்.

அப்படி இல்லையென பதிவிடுவார்களேயானால் இனி ‘மோடி’ என அழைக்காமல் ‘புதிய இந்தியாவை படைத்தவர்’ என்றோ ‘ஊழலை ஒழித்த உத்தமர்’ என்றோ, ‘உலகத்தின் எழுச்சி நாயகன்’ என்றோ அழைப்பார்களா?

என்னை பொறுத்த வரை மரியாதையோடு ஒருவரின் பெயரை சொல்லி அழைப்பது மட்டுமே அவர்களுக்கு செய்யும் மரியாதை, சிறப்பு என நான் எண்ணுகிறேன்.

  • நாராயணன் திருப்பதி (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Topics

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

Entertainment News

Popular Categories