January 24, 2025, 5:51 AM
24.2 C
Chennai

சுகாதார பணியாளர் வேடத்தில் கொடுத்த கொரோனா கொலை மருந்து! சந்தேகத்தில் கணவன் செய்த கொலை முயற்சி!

தில்லியில் கொரோனா பாதிப்பை பயன்படுத்தி ஒரு குடும்பத்தையே கொலை செய்ய முயற்சி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தில்லியில் ஒரு கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

தில்லியை சேர்ந்த 42 வயதான பிரதீப் என்பவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையில் இருந்த ஒரு நபருடன் தனது மனைவி தொடர்பில் இருந்ததாக தெரியவந்ததால் கடும் ஆத்திரமடைந்தார். அதனால் அந்த நபரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதற்கு கொரோனா பாதிப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர், இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற பணம் கொடுத்து இரண்டு பெண்களை பயன்படுத்திக் கொண்டார்.

சுகாதார பணியாளர்கள் போல் நடித்து அந்த நபரின் வீட்டிற்கு சென்ற பெண்கள், விஷம் நிரப்பப்பட்ட ஒரு பாட்டிலை கொடுத்துள்ளனர். கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்து எனக் கூறி நாடகமாடி அந்த குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளனர்.

போலி சுகாதார பணியாளர்களின் பேச்சை நம்பி மருந்து என நினைத்து அந்த நபர் உட்பட குடும்பத்தினர் 4 பேர் விஷத்தை குடித்துள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ALSO READ:  டோலி.. டோலி... முன்னாள் விவசாயிகளின் மறுபக்கம்!

சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரித்த போது, உண்மை தெரியவந்தது. இதனையடுத்து பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். கொரோனா பாதிப்பால் உலகமே தலைகீழாக மாறியுள்ள நிலையில், கொரோனாவை பயன்படுத்தி கொலை செய்ய முயற்சி நடந்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

பஞ்சாங்கம் ஜன.23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜன.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...