December 5, 2025, 1:55 PM
26.9 C
Chennai

நவராத்திரி பூஜைகள் செய்யா விட்டால்… த்ரிராத்ரி விரதம் உண்டு என்கிறார்களே?

navarathri-spl
navarathri-spl

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கேள்வி:ஒன்பது நாட்கள் பூஜை செய்ய இயலாதவர்களுக்கு மாற்றி வழிமுறை ‘த்ரிராத்ரி’ விரதம் என்பார்களே! அதன் சிறப்பு என்ன?

பதில்: சரந் நவராத்திரியில்  அமாவாசைக்குப் பிறகு பாட்யமி முதல் நவமி வரை பூஜை கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய இயலாதவர்கள் த்ருதியை முதல் செய்யலாம். அப்போது ஏழு நாட்கள் செய்யும் ‘சப்த ராத்ரி’ விரதம் எனப்படும்.

அவ்வாறு கூட செய்ய இயலாதவர்கள் மாற்று வழி முறையாக பஞ்சமி திதியன்று தொடங்கி ஐந்து இரவுகள் ‘பஞ்சராத்ரி’ விரதம் செய்யலாம். அவ்வாறு கூட செய்ய இயலாதவர்கள் சப்தமி தொடங்கி செய்யலாம். சப்தமி அஷ்டமி நவமி மூன்று இரவுகள் ‘த்ரிராத்ரி’ விரதம் எனப்படுகிறது. இதையாவது செய்தே தீர வேண்டும். 

த்ரி ராத்ரி விரதம் கூட செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது பூஜை செய்ய வேண்டும். நவமி பூஜை மிக முக்கியம். அவ்வளவுதானே தவிர, விஜய தசமிதான் வரப்போகிறதே என்று நவமி வரை செய்யாமல் இருந்துவிட்டு தசமி அன்று மட்டும் செய்தால் பலன் கிடைக்காது. அது சாரதா வழிபாடு ஆகாது. அதாவது சரந் நவராத்திரி பூஜையின் கீழ் வராது.
அதனால் த்ரிராத்ரி விரதம் முக்கியமானது.

த்ரிராத்ரிகள் பூஜை செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது கட்டாயம் பூஜை செய்ய வேண்டும்.   சரந் நவராத்திரி பூஜை  செய்யாமலே இருந்து விடக்கூடாது என்பதால் இத்தனை தளர்வுகள் அளித்துள்ளார்கள்.

அதனால், நவராத்திரி, சப்த ராத்திரி, பஞ்ச ராத்திரி, த்ரி ராத்திரி, ஏக ராத்திரி.. என்று இத்தனை வழிமுறைகளை கூறியுள்ளார்கள். 
இவற்றில் முக்கியமானது என்னவென்றால்… இதில் மூன்று என்ற எண்ணுக்கு மிகவும் பிரத்தியேகம் உள்ளது.

மும்மூன்று ஒன்பது ஆகிறது.  சரந் நவராத்திரியில் மூன்று முறை ‘மூன்று’ வருகிறது. ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் இவற்றில் ஒரு மூன்றையாவது கடைபிடிக்க வேண்டும். அப்போது மூன்று சக்திகளின் சொரூபிணியான  அம்பிகையை இந்த மூன்று இரவுகள் மகா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி ரூபிணியாக வழிபடும் பாக்கியம் கிட்டும்.

மற்றொரு வழிமுறையில் சரஸ்வதி லட்சுமி துர்க்கை என்று கூறப்படுகிறது. எவ்விதமாகவேனும் சரி… மூன்று என்ற எண், அற்புதமான விஸ்வ நியமத்தைக் குறிக்கும் குறியீடு. இது ஒரு பூரணமான எண். திரிகரணம் மனம் வாக்கு செயல்,  த்ரிகாலம், த்ரிலேகம் …  என்கிறோம்.

இந்த காரணங்களால் மூன்று என்ற எண்ணுக்கு அத்தனை முக்கியத்துவம் இருப்பதால் தான் மனம் வாக்கு செயல் களை தூய்மைப்படுத்துவதற்கும் சங்கல்பங்கள் நிறைவேறுவதற்கும்  இந்த த்ரிராத்ரி  விரதம் மிக முக்கியமானது. 

நவராத்திரி விரதத்தை ஒன்பது நாட்கள் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களாவது செய்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் எடுத்துக் கூறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories