23-03-2023 11:30 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்நவராத்திரி பூஜைகள் செய்யா விட்டால்... த்ரிராத்ரி விரதம் உண்டு என்கிறார்களே?

    To Read in other Indian Languages…

    நவராத்திரி பூஜைகள் செய்யா விட்டால்… த்ரிராத்ரி விரதம் உண்டு என்கிறார்களே?

    navarathri-spl
    navarathri-spl

    நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

    தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
    தமிழில்: ராஜி ரகுநாதன்

    கேள்வி:ஒன்பது நாட்கள் பூஜை செய்ய இயலாதவர்களுக்கு மாற்றி வழிமுறை ‘த்ரிராத்ரி’ விரதம் என்பார்களே! அதன் சிறப்பு என்ன?

    பதில்: சரந் நவராத்திரியில்  அமாவாசைக்குப் பிறகு பாட்யமி முதல் நவமி வரை பூஜை கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய இயலாதவர்கள் த்ருதியை முதல் செய்யலாம். அப்போது ஏழு நாட்கள் செய்யும் ‘சப்த ராத்ரி’ விரதம் எனப்படும்.

    அவ்வாறு கூட செய்ய இயலாதவர்கள் மாற்று வழி முறையாக பஞ்சமி திதியன்று தொடங்கி ஐந்து இரவுகள் ‘பஞ்சராத்ரி’ விரதம் செய்யலாம். அவ்வாறு கூட செய்ய இயலாதவர்கள் சப்தமி தொடங்கி செய்யலாம். சப்தமி அஷ்டமி நவமி மூன்று இரவுகள் ‘த்ரிராத்ரி’ விரதம் எனப்படுகிறது. இதையாவது செய்தே தீர வேண்டும். 

    த்ரி ராத்ரி விரதம் கூட செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது பூஜை செய்ய வேண்டும். நவமி பூஜை மிக முக்கியம். அவ்வளவுதானே தவிர, விஜய தசமிதான் வரப்போகிறதே என்று நவமி வரை செய்யாமல் இருந்துவிட்டு தசமி அன்று மட்டும் செய்தால் பலன் கிடைக்காது. அது சாரதா வழிபாடு ஆகாது. அதாவது சரந் நவராத்திரி பூஜையின் கீழ் வராது.
    அதனால் த்ரிராத்ரி விரதம் முக்கியமானது.

    த்ரிராத்ரிகள் பூஜை செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது கட்டாயம் பூஜை செய்ய வேண்டும்.   சரந் நவராத்திரி பூஜை  செய்யாமலே இருந்து விடக்கூடாது என்பதால் இத்தனை தளர்வுகள் அளித்துள்ளார்கள்.

    அதனால், நவராத்திரி, சப்த ராத்திரி, பஞ்ச ராத்திரி, த்ரி ராத்திரி, ஏக ராத்திரி.. என்று இத்தனை வழிமுறைகளை கூறியுள்ளார்கள். 
    இவற்றில் முக்கியமானது என்னவென்றால்… இதில் மூன்று என்ற எண்ணுக்கு மிகவும் பிரத்தியேகம் உள்ளது.

    மும்மூன்று ஒன்பது ஆகிறது.  சரந் நவராத்திரியில் மூன்று முறை ‘மூன்று’ வருகிறது. ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் இவற்றில் ஒரு மூன்றையாவது கடைபிடிக்க வேண்டும். அப்போது மூன்று சக்திகளின் சொரூபிணியான  அம்பிகையை இந்த மூன்று இரவுகள் மகா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி ரூபிணியாக வழிபடும் பாக்கியம் கிட்டும்.

    மற்றொரு வழிமுறையில் சரஸ்வதி லட்சுமி துர்க்கை என்று கூறப்படுகிறது. எவ்விதமாகவேனும் சரி… மூன்று என்ற எண், அற்புதமான விஸ்வ நியமத்தைக் குறிக்கும் குறியீடு. இது ஒரு பூரணமான எண். திரிகரணம் மனம் வாக்கு செயல்,  த்ரிகாலம், த்ரிலேகம் …  என்கிறோம்.

    இந்த காரணங்களால் மூன்று என்ற எண்ணுக்கு அத்தனை முக்கியத்துவம் இருப்பதால் தான் மனம் வாக்கு செயல் களை தூய்மைப்படுத்துவதற்கும் சங்கல்பங்கள் நிறைவேறுவதற்கும்  இந்த த்ரிராத்ரி  விரதம் மிக முக்கியமானது. 

    நவராத்திரி விரதத்தை ஒன்பது நாட்கள் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களாவது செய்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் எடுத்துக் கூறுகிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty − nineteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...