சுபாஷிதம்: ரசிப்புத் தன்மையின் பலன்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

24. ரசிப்புத்தன்மை

செய்யுள்:

இதர பாபபலானி யதேச்சயா விதரதானி சஹே சதுரானன
அரசிகாய கவித்வ நிவேதனம் சிரசி மா லிக! மா லிக! மா லிக!

–ஶ்ரீஹர்ஷர்

பொருள்:,

ஓ பிரம்ம தேவா! என் நெற்றியில் எத்தனை பாவ பலன்களை வேண்டு மானாலும் எழுதிக் கொள். பொறுத்துக் கொள்வேன். ஆனால் ரசிப்புத் தன்மையற்றவர்களின் முன்னால் கவிதை பாடும் துர்பாக்கியத்தை மட்டும் என் நெற்றியில் தயவு செய்து எழுதி விடாதே! எழுதி விடாதே! எழுதி விடாதே!

விளக்கம்:

ஸ்ரீ ஹர்ஷர் எழுதிய புகழ்பெற்ற செய்யுள் இது. ரசிப்புத்தன்மையற்றவர்களிடம் கலைகளை வெளிப்படுத்துவது செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்று கூறும் செய்யுள் இது.

இலக்கிய இன்பத்தை ரசிக்கத் தெரியாதவர்களிடம் கவிதை படிப்பது சாம்பலில் ஊற்றிய பன்னீர் போல் வீண். ரசனையற்றவர்கள் என்றால் இயல் இசை நாடக ருசிகளை அனுபவிப்பதில் விருப்பம் அற்றவர்கள். நாம் கூறும் விஷயத்தை அருகில் இருப்பவர் புரிந்து கொள்ளாவிட்டால் எத்தனை வருத்தமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படிப்பட்டதே ஶ்ரீஹர்ஷருடைய வேதனையும்!

ஒரு மகாகவியோ இசைக்கலைஞர்களோ வெளிப்படுத்தும் கலையை அனுபவிக்கும் ரசிகர் இருந்தால்தான் அந்த கலைஞர்களுக்கும் திருப்தி. அந்த கலைக்கும் மதிப்பு.

அவ்வாறு ரசித்து அனுபவிப்பவர்களின் கைதட்டல் அளிக்கும் சுகமே தனி! சபை முழுவதும் நிறையாவிட்டாலும் ரசித்து அனுபவிக்கும் அன்பர்கள் நிறைந்து இருந்தால் போதும்… அந்தக் கலைஞர் மகிழ்வார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இலக்கிய, சங்கீத சபைகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக யாரையாவது அழைக்கும்போது மகாகவி ஸ்ரீஹர்ஷரின் வேதனையை நிர்வாகிகள் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். ரசனையற்றவர்களை அப்படிப்பட்ட சபைகளுக்கு அழைக்கவே கூடாது. நல்ல கவிதைகளைப் படித்து, நல்ல சங்கீதத்தை கேட்டு மகிழும் மனப்பாங்கு இளம் தலைமுறையினருக்கு பழக்கமாக வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ண தேவராயர் போன்ற ரசனை மிகுந்த மகாராஜாக்கள் கலைகளை வளர்த்தார்கள். ரசனையற்ற முகலாயர் ஆட்சியில் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் அவமரியாதையே நடந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories