சுபாஷிதம்: ரசிப்புத் தன்மையின் பலன்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

24. ரசிப்புத்தன்மை

செய்யுள்:

இதர பாபபலானி யதேச்சயா விதரதானி சஹே சதுரானன
அரசிகாய கவித்வ நிவேதனம் சிரசி மா லிக! மா லிக! மா லிக!

–ஶ்ரீஹர்ஷர்

பொருள்:,

ஓ பிரம்ம தேவா! என் நெற்றியில் எத்தனை பாவ பலன்களை வேண்டு மானாலும் எழுதிக் கொள். பொறுத்துக் கொள்வேன். ஆனால் ரசிப்புத் தன்மையற்றவர்களின் முன்னால் கவிதை பாடும் துர்பாக்கியத்தை மட்டும் என் நெற்றியில் தயவு செய்து எழுதி விடாதே! எழுதி விடாதே! எழுதி விடாதே!

விளக்கம்:

ஸ்ரீ ஹர்ஷர் எழுதிய புகழ்பெற்ற செய்யுள் இது. ரசிப்புத்தன்மையற்றவர்களிடம் கலைகளை வெளிப்படுத்துவது செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்று கூறும் செய்யுள் இது.

இலக்கிய இன்பத்தை ரசிக்கத் தெரியாதவர்களிடம் கவிதை படிப்பது சாம்பலில் ஊற்றிய பன்னீர் போல் வீண். ரசனையற்றவர்கள் என்றால் இயல் இசை நாடக ருசிகளை அனுபவிப்பதில் விருப்பம் அற்றவர்கள். நாம் கூறும் விஷயத்தை அருகில் இருப்பவர் புரிந்து கொள்ளாவிட்டால் எத்தனை வருத்தமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படிப்பட்டதே ஶ்ரீஹர்ஷருடைய வேதனையும்!

ஒரு மகாகவியோ இசைக்கலைஞர்களோ வெளிப்படுத்தும் கலையை அனுபவிக்கும் ரசிகர் இருந்தால்தான் அந்த கலைஞர்களுக்கும் திருப்தி. அந்த கலைக்கும் மதிப்பு.

அவ்வாறு ரசித்து அனுபவிப்பவர்களின் கைதட்டல் அளிக்கும் சுகமே தனி! சபை முழுவதும் நிறையாவிட்டாலும் ரசித்து அனுபவிக்கும் அன்பர்கள் நிறைந்து இருந்தால் போதும்… அந்தக் கலைஞர் மகிழ்வார்.

இலக்கிய, சங்கீத சபைகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக யாரையாவது அழைக்கும்போது மகாகவி ஸ்ரீஹர்ஷரின் வேதனையை நிர்வாகிகள் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். ரசனையற்றவர்களை அப்படிப்பட்ட சபைகளுக்கு அழைக்கவே கூடாது. நல்ல கவிதைகளைப் படித்து, நல்ல சங்கீதத்தை கேட்டு மகிழும் மனப்பாங்கு இளம் தலைமுறையினருக்கு பழக்கமாக வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ண தேவராயர் போன்ற ரசனை மிகுந்த மகாராஜாக்கள் கலைகளை வளர்த்தார்கள். ரசனையற்ற முகலாயர் ஆட்சியில் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் அவமரியாதையே நடந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories