ஆரோக்கிய தீபோத்ஸவத்துடன் காந்தி ஜெயந்தி!

mahatma gandhi
mahatma gandhi
  • ஜெயஸ்ரீ எம்.சாரி

மஹாராஷ்டிர மாநிலத்தில் ‘காந்தி மாவட்டம்’ என்று
அறியப்படும் வர்தாவில் அமைந்துள்ள மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயாவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆரோக்கிய தீபோற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவினை மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கி வைக்கிறார், என்று காதர் நவாஸ் கான், ஹிந்தி பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஆளுநர் பல்கலைகழகத்தில் உள்ள ‘காந்தி ஹில்ஸ்’ என்னும் இடத்திலிருந்து ஆரோக்கிய தீபோத்ஸவத்தை மாலை ஏழு மணிக்கு துவக்கி வைக்கிறார்.

Bhagat Singh Koshyari
Bhagat Singh Koshyari பகத்சிங் கோஷ்யாரி, மஹாராஷ்டிர ஆளுநர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பாக ஆளுநர் பல்கலைக்கழகத்தின் கஸ்தூரிபா அரங்கத்தில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான ‘காந்தி தர்ஷன்’ என்னும் மாநாட்டில் பங்கேற்கிறார். டாக்டர் ஸ்ரீநிவாஸ் வராகேடி, கோண்டுவானா யுனிவர்சிட்டி மற்றும் ராம்டெக்கில் இயங்கும் கவிகுல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், நிதிஷ் பரத்வாஜ், நடிகர், மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்
gandhi hills
gandhi hills காந்தி ஹில்ஸ், மகாத்மா காந்தி ஹிந்தி விஷ்வவித்யாலயா, வர்தா.

இந்நிகழ்ச்சியில் புரொபசர் ரஜனீஷ் குமார் ஷுக்ல, துணைவேந்தர், மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வவித்யாலயா, தலைமை தாங்குகிறார்.

மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயாமானது 2019-ஆம் ஆண்டிலிருந்து காந்தி ஜெயந்தி அன்று ஆரோக்கிய தீபோற்சவம் நிகழ்ச்சியினை துணை வேந்தரின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்கிறது. வர்தா மக்களும் இந்த நிகழ்ச்சிக்கு பேராதரவு தந்து கொண்டிருக்கின்றனர். நகர வீதிகளிலும் தங்கள் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி வைத்து மகாத்மா காந்தியடிகளுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றனர்.

இந்த வருடம் தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அனைவரும் விடுபடவேண்டும் என்று நோக்கத்தில் தீப உற்சவம் கொண்டாடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories