திருப்புகழ் கதைகள்: குழல் அடவி (சேதுபந்தன சிறப்பு)

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 191
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன் –

குழல் அடவி – பழநி 4
சேதுபந்தனம் (தொடர்ச்சி)

அணில்கள் சேது பந்தனம் பணியில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்வதைப் பார்த்த இராமபிரான், “தம்பி, நானும் அதைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இந்த அணில்கள், நம் மீது கொண்டிருக்கும் அன்பைப் பார்த்தாயா? பாலம் அமைப்பதற்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்கின்றன” என்று கூறினார்.

பிறகு கனிவோடு அந்த அணில்களை உள்ளங்கையில் தூக்கிப் பரிவோடு அதன் முதுகில் தனது மூன்று விரல்களால் வருடிக் கொடுத்தார் இராமபிரான். ஶ்ரீராமபிரானின் கை விரல்கள்பட்ட தடம் அப்படியே அணில்களின் முதுகில் பதிந்தன. இராமபிரானால் அன்போடு ஆசீர்வதிக்கப்பட்ட அவ்வகை அணில்கள் இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் இன்றளவும் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் அணில்கள், இராமர் பாலம் அமைப்பதற்கு உதவிய கதையானது, வால்மீகி இராமாயணத்தில் கிடையாது; இது மிகவும் பக்தி மயமாக எழுதப்பட்ட துளசிதாசரின் ராமாயணத்தில் உள்ள தகவல்.

எல்லாம் வல்ல பரம்பொருளான இராமபிரான் கடலின் மீது பாலம் அமைக்காமல், தனது சர்வ வல்லமையால் இலங்கைக்கு சென்றிருக்க முடியாதா? என நாம் எண்ணலாம். தனுர் வேதத்தில் (வில்வித்தை) கரைகண்ட ஸ்ரீராமபிரானால் கடலின் மீது அம்புகளைக் கொண்டே பாலம் அமைத்து, அதன் மீது சென்றிருக்கலாமே? இந்த சந்தேகத்தை மகாபாரதத்தில் அர்ச்சுனன் அனுமாரிடம் கேட்பதாக ஒரு நிகழ்ச்சி வரும். கடலின் மீது பாலம் அமைத்து இராமபிரான் இலங்கைக்குச் சென்றதன் காரணம், சீதாதேவியை மீட்கும் புனிதப் பணியில் வானரங்கள், கரடிகள், அணில்கள் என பலதரப்பட்ட உயிர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்பதே என்பதால்தான்.

இராமாயணம் என்பது உண்மைச் சம்பவம் கதையல்ல என்பதனைக் காட்ட இந்தப் பாலம் இன்றும் சாட்சியாக இருக்கிறது. இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து கட்டப்பட்ட பாலமானது, நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் இருந்தது. (யோஜனை_அக்கால அளவீடு; தற்காலத்திய அளவின்படி 30 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது) இலங்கையில் இருந்த சுவேல மலை வரை அந்தப் பாலமானது சமுத்திரத்தின் மீது அமைக்கப்பட்டது.

முதலில் பெரிய மரத்துண்டுகளைக் கடலில் போட்டு, அதன் மீது பெரிய பாறைகளைப் போட்டு, அதன் மீது சிறிய பாறைகளை அடுக்கி, அதன் மீது சிறு கற்களைக் கொட்டி, அதன் மீது மணலைக் கொட்டி பாலத்தை அமைத்தனர் வானரங்கள். சமுத்திரத்திற்கு மேலே மூன்றடி உயரத்தின் மேலே பாலமானது அமைக்கப்பட்டது. இதுவே “சேதுபந்தனம்” என்ற இராமர் பாலம் அமைத்த வரலாறு. இராமர், கடலைக் கடப்பதற்கு முதலில் சமுத்திர ராஜனின் அனுமதியை வேண்டி மூன்று நாட்கள், தர்ப்பைப் புல்லின் மீது படுத்திருந்து உணவு உண்ணாமலும், நீர் அருந்தாமலும் தவம் செய்தார்.

சமுத்திரராஜன் வரவில்லை என்பதால், கடும் சினத்தோடு கடலை வற்றச் செய்து விடுவேன்; என்று அம்பெய்யப் போனபோதே, பயந்து வந்த சமுத்திரராஜனின் அறிவுரையின்படி, மரங்களையும், பாறைகளையும் கொண்டு சமுத்திரத்தின் மீது பாலம் அமைக்கச் செய்தார் இராமர்.

இதுவே இராமர் பாலம் எழுந்த வரலாறு. இராமர் பாலம்கட்ட ஆரம்பிப்பதற்கு முன்னர் விநாயகரையும், சிவபெருமானையும் வழிபட்டதாக வால்மீகிராமாயணம் கூறுகிறது. எத்தனையோ இராமாயணங்கள் இருந்தாலும் வால்மீகி இராமாயணம் மட்டுமே இதிஹாசம். இதிஹாசம் என்றால் “இது இப்படி நடந்தது” என்று பொருள்.

தான் கண்ணால் கண்டவற்றை அப்படியே எழுதி வைத்த புனிதமான வரலாறே இராமாயணம். வால்மீகி முனிவர் வாழ்ந்திருந்த காலத்தில் நடந்த புனிதமான வரலாற்றை நாரதர் கூற, அவற்றை அப்படியே வால்மீகி முனிவர் எழுதிவைத்தார். எனவே வால்மீகிராமாயணம் மட்டுமே நடந்த வரலாறு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories