December 6, 2025, 8:51 AM
23.8 C
Chennai

இராமாயண எக்ஸ்பிரஸ்: சீருடையின் நிறம் மாற்றம்!

Ramayan express
Ramayan express

ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் ஊழியர்களின் காவி நிற சீருடைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சீருடையின் நிறம் மாற்றப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

கடவுள் ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 15 இடங்களுக்கு புனித பயணம் அழைத்து செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 7ம் தேதியன்று துவங்கப்பட்டது.

தில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் துவங்கி அயோத்தியா, பிரயாக்ராஜ், நந்திகிராம், ஜனக்புர், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உட்பட 15 கோவில்களுக்கு 17 நாட்களில், 7,500 கி.மீ., தொலைவுக்கு இந்த புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ரயிலிலேயே உயர்தர உணவகம், நுாலகம், நவீன குளியலறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பயணிக்கும் ரயில் என்பதால், உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தலைப்பாகையுடன் கூடிய காவி சீருடை வழங்கப்பட்டது. அவர்கள் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் அணிந்து துறவிகளைப் போல தோற்றம் அளித்தனர்.

after Ramayan express dress
after Ramayan express dress

இதற்கு ஹிந்து மத தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.”ரயில் உணவக ஊழியர்களுக்கு காவி சீருடை வழங்கப்பட்டிருப்பது ஹிந்து மதத்தையும், துறவிகளையும் அவமானப்படுத்தும் செயல்.”காவி நிற உடை மாற்றப்படவில்லை எனில், ராமாயண எக்ஸ்பிரஸ் ரயிலை தடுத்து, போராட்டம் நடத்துவோம்,” என, மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயின் அகாரா பரிஷத்தின் முன்னாள் பொது செயலர் அவ்தேஷ்புரி கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து, ‘காவி சீருடையை மாற்றி, உணவக ஊழியர்கள் அணியும் வழக்கமான சீருடை வழங்கப்படும்’ என, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் நேற்று அறிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories