பிராமணர்களின் உரிமைக் குரல்!

Published:

brahmins protest in chennai - 2026
#image_title

உண்மையில், திராவிடரால் ஒடுக்ப்பட்ட, நசுக்கப்பட்ட , பிதுக்கப்பட்டுள்ள பிராமணர்களின் பேரணியின்- உரிமைக்குரல்!

எழும்பூரில் இன்று ஏறக்குறைய இருபதாயிரம் – முப்பதாயிரம் பிராமணர்கள் கூடி உரிமைக்குரல் எழுப்பினர். கணிசமாக பெண்கள். பல மாவட்டங்கள் ஊர்களிலிருந்து வந்திருந்தனர்.

அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களும், சமுதாய தலைவர்களும் வந்து ஆதரவு தந்து பேசினார்கள்

பாமக தலைவர் ராமதாஸ் தனது பிரதிநிதியை அனுப்பி பேச வைத்தார். காங், பாஜக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பறையர் பேரவை, அம்பேத்கர் ஜனசக்தி, வீரவன்னியர் பேரவை, நாடார் சமூகத்தலைவர், சிங்கமாக கர்ஜிக்கும் ஃபார்வர்ட் ப்ளாக் திருமாறன், இஸ்லாமியரான வேலூர் இப்ராஹிம் இன்னும் பல சமூகத்தலைவர்கள் ஆதரவு குரல் எழுப்பினர்

பிராமணர் சமூகத்தின் மீது தீண்டாமை கடைபிடிக்கும் திராவிடம் என் கால் செருப்புக்குச் சமானம். நான் இன்று சென்னை வந்து தொழுகை நடத்தி கூட்டத்திற்கு வர வீடு தந்தது ராம்குமார் என்ற பிராமணர். நான் தேசிய இனத்தால் ஹிந்து, வழிபாட்டால் இஸ்லாமியன், மொழியால் தமிழன் – வேலூர் இப்ராஹீம்

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

PCR சட்டம் போல பிராமணர்களை இழிவு படுத்துவோரை தண்டிக்க சட்டம் வேண்டும். ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த சமுதாயமான பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் போன்ற கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் 6 வது மிகப்பெரிய சமூகம் பிராமணர்கள். தேர்தல் சக்தியாக ஒன்றுபட வலியுறுத்தப்பட்டது

வேலூர் இப்ராஹிமுக்கு அடுத்து அதிக வரவேற்பை பெற்ற ஸ்டார் பேச்சாளர் கஸ்தூரி. பிராமணர்களை இழிவு படுத்தி பேசுவோர், சினிமா எடுப்போர் மீது வழக்கு தொடுக்கும் அமைப்பு உருவாக்கப்படும் என்றார்.

தண்ணீர் பாட்டில் சப்ளை செய்து கொண்டே ஒரு க்ரூப். காலி பாட்டில்களை collect பண்ணியபடி பின்னாடியே ஒரு க்ரூப். நாற்காலிகள் உடைக்கப்படவில்லை. வீட்டிற்கு யாரும் தூக்கி கொண்டு போகவில்லை. சரக்கு பாட்டில் இல்லை. சாராய நெடி இல்லை. கெட்டவார்த்தை வசவுகள் இல்லை

பிராமணர்களில் எளிய அடித்தட்டு மனிதர்கள் மட்டும் பேசினார். பிரமாதமாக பேசக்கூடிய intellectuals க்கு பேச வாய்ப்பளிக்க வில்லை. பாண்டே, கோலாஹல ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் அழைக்கப்படவில்லை போலும்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி. charector assassination செய்து கொண்ட SV சேகர் அழைக்கப்படவில்லை. மதுவந்தி உளராமல் பேசினார். அமெரிக்கை நாராயணனின் நாராச பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப பாதியில் பேச்சை முடிக்கவேண்டிய நிலை

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

ஈவெராமசாமி, திராவிடம், விடியல் ஆட்சி அடித்து தோய்த்து கிழித்து க்ளிப் போட்டு மாட்டப்பட்டன.

பலவண்ண நூல்களையும், பூணூல் களையும் ஒருங்கிணைத்தவர் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத். All credits to him only.

பொழுதுபோக்கிற்காக முகநூலில் கம்பு சுத்தும் பிராமண போராளிகளும் வந்திருந்தால் லட்சம் தாண்டியிருக்கும்.

  • D.V. Sivakumar

Related articles

Recent articles

spot_img