December 5, 2025, 8:44 PM
26.7 C
Chennai

புத்தகம் அறிமுகம் : சங்க இலக்கியத்தில் வானிலைச் செய்திகள்!

sanga ilakkiyathil vanilai seithigal - 2025

பெயர் : சங்க இலக்கியத்தில் வானிலைச் செய்திகள்
ஆசிரியர் : கு.வை. பாலசுப்ரமனியன்,
பக்கங்கள் : 272
விலை : ரூ.300
பதிப்பகம் : முக்கடல் ,11, 33ம் தெரு, பாலாஜி நகர், விரிவு 3, புழுதிவாக்கம், சென்னை 91.

புத்தக ஆசிரியர்  : கு.வை.பாலசுப்ரமணியன், நுங்கம்பாக்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தில், வானிலை ஆய்வாளர் பணியில் உள்ளார்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக உரையாற்றக் கூடிய, திரு. கே.வி.பி அவர்கள், தன்னுடைய ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட சூறாவளி பற்றிய கட்டுரைக்காக ஜனாதிபதியின் “ராஜ்பாஷா புரஸ்கார்” பரிசினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது வானிலை பற்றிய கட்டுரைகள் பல தமிழ் நாளேடுகளில் வந்துள்ளது. ஒலி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வானிலை பற்றி நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

சங்க இலக்கியத்தில் வானிலை செய்திகளைப் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்.

புத்தகத்தைப் பற்றிய ஒர் கண்ணோட்டம் :

தமிழ் இலக்கியங்களில் வானிலை பற்றிய குறிப்புகள் செறிந்து காணப்பட்டாலும், அதனைத் தொகுத்து அறிவியல் கண்ணோட்டத்தில் ஆய்ந்து எடுத்துரைக்கும் நூல்கள் மிகக் குறைவு. இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட வானிலைக் கருத்துகளை எளிதில் அறிய முடிகிறது. தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சங்க இலக்கியத்தில் வானிலைக் குறிப்புகளை இப்புத்தகம் எடுத்துரைக்க இயல்கிறது.

வானிலை காலநிலை கருத்து விளக்கம் என்றஅத்தியாயத்தில் வானிலை அறிவியலின் வளர்ச்சி, தரவு சேகரிக்கும் முறைகளின் பாகுபாடுகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர்.

சங்க இலக்கியத்தில் காற்று,
 சங்க இலக்கியத்தில் மழை,  
சங்க இலக்கியத்தில் மேகம்
மற்றும் சங்க இலக்கியத்தில் காலநிலை
ஆகிய அத்தியாயங்களில் அகநானூறு தொடங்கி எல்லா சங்க இலக்கியங்களிலும் காணத் தெரிகின்ற வானிலச் செய்திகளையும் குறிப்புகளையும் மிகத் தெளிவாகவும், சுவையாகவும் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.

சங்க இலக்கியங்களில் நிலவியல் மற்றும் பருவ கால மாற்றங்களை பதிவு செய்துள்ளனர். தற்போதய காலநிலை வகைப்பாடு ரஷ்ய வானிலையாளர் விளாடிமீர் கோப்பன் என்பவர் வரையறுத்ததைப் பின்பற்றியதாகும்.

அதற்குச் சற்றும் குறைந்தது அல்ல தொல்காப்பியரின் பதிவுகள் என்கிறார் வானிலை ஆய்வாளர் கே.வி.பி.

“ஐந்திணைக்கும் தொல்காப்பியர் கூறியுள்ள நிலமும் பொழுதும், கருப்பொருட்களும், உரிபொருட்களும் அவரை ஒரு திறமையான காலநிலையாளராக நமக்குப் புலப்படுத்துகிறது.”

தக்க ஆதாரங்களுடனும், சுவையான இலக்கியச் சுவையுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் நிச்சயமாக தமிழ்விரும்பிகள் அனைவர் கையிலும், முக்கியமாக அறிவியல் மற்றும் தமிழ் வளர்க்கும் கல்லூரிகள், நூலகங்களில் இருக்கவேண்டும் என தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர், முனைவர் பாலசந்திரன்.

  • கமலா முரளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories