கேரளாவில், கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு, மலப்புரம் போன்ற பகுதிகள்தான் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருள்களும் நிதியுதவிகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த அம்மாநில முன்னாள் அமைச்சரும் சி.பி.எம் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீமதி, தன் கையில் அணிந்திருந்த தங்கவளையல்களைக் கழற்றி, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தங்கள் மாநிலம் உட்பட, நாடு முழுவதும் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, ‘தங்க சேலஞ்ச்’ என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது, கேரளா முழுவதும் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், இதேபோன்ற ஒரு செயல்மூலம் முதல்வர் பினராயி விஜயனை நெகிழவைத்துள்ளார், நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர்.
சி.பி.எம் கட்சித் தலைவர் லாரன்ஸின் 90-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நேற்று எர்ணாகுளம் டவுன் ஹாலில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பினராயி விஜயன் வந்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்த லியானா தேஜுஸ் என்ற சிறுமி, தன்னையும் அங்கு அழைத்துச்செல்லும்படி தந்தையிடம் கேட்டு, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
“கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது லியானா, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினார். அதேபோல், இந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறிவந்தாள். முதல்வர் எர்ணாகுளம் வந்துள்ளார் என்ற செய்தி அறிந்ததும் தன்னையும் அங்கே அழைத்துச்செல்லும்படி கேட்டாள்.
அவளின் விருப்பப்படி, சேர்த்துவைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் எர்ணாகுளம் வந்தோம். அதற்குள் முதல்வர் விழாவை முடித்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அவரைப் பார்த்ததும் அருகில் ஓடிய லியானா, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை நேரடியாக முதல்வரிடம் வழங்கினார்” என லியானாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
அந்தச் சிறுமி முதல்வரிடம் எவ்வளவு பணம் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஆனால், பணம் வழங்கிய பிறகு இரண்டு அடி பின்னால் வந்த சிறுமி, என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. மீண்டும் முதல்வர் கார் அருகில் சென்று, ‘ வெயிட் பண்ணுங்க அங்கிள், இதையும் வாங்கிக்கோங்க’ எனக் கூறி, தான் காதில் அணிந்திருந்த தங்கக் காதணியைக் கழற்றி முதல்வரின் கையில் கொடுத்துள்ளார். சிறுமியின் இந்த செயலை கண்டு வியந்து போன முதல்வர், லியானாவைப் பாராட்டி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண நிதி நிதி திரட்டும் நாட்கள் இவை. ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசமான அனுபவம். குறிப்பாக குழந்தைகள் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்க வரும்போது.
அத்தகைய அனுபவம் இன்று கொச்சினில் நினைவுக்கு வந்தது. தோழர் எம்.எம். லாரன்ஸின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ஒரு சிறுமி காரில் ஓடினார். சிறுவன் தனது சேமிப்பு வலையில் உள்ள பணத்தை நிவாரண நிதியில் போடுவதற்காக இவ்வளவு நேரம் காத்திருந்தான். அவள் பயணம் செய்ய ஆரம்பித்தபோது அவள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தினாள். “அதையும் செய்யுங்கள்” என்று அவர் கிசுகிசுத்தார், இரண்டு காதுகளிலும் காதணி. நான்காம் வகுப்பு பெண் லியானா தேஜாஸ் மனித அன்பின் சிறந்த உதாரணத்தை எங்களுக்குக் காட்டினார்.
லியானா அலுவாவின் புனித பிரான்சிஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி. திரைப்பட தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் நன்றி மற்றும் செவிலியர் சினிமாவோலின் மகள் என்று பின்னர் அறிந்து கொண்டார். நீங்கள் லியானாவை எவ்வளவு பாராட்டினாலும் சரி. லியானாவைப் போன்ற சில குழந்தைகள் அமைத்துள்ள ஒவ்வொரு நாளும் இது ஒரு அனுபவம். எங்கள் குழந்தைகள் புதிய கேரளாவின் பொக்கிஷங்கள்.