உ.வே.சாமிநாத ஐயர் : தமிழாய் வாழ்ந்தவர் தாள் பணிவோம்!

uvesaminathaaiyar
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்

ஏப்.28 – உவேசா அவர்களுடைய நினைவு தினம். தமிழாய் வாழ்ந்தவரை தாள் பணிவோம்!

திருக்குறள் சரஸ்வதி மஹால் நூல் நிலையத்திற்கு எப்படி வந்தது என்பதைப்பற்றி தமிழ் தாத்தா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் சுவையான கட்டுரை.

அந்த காலத்தில் தஞ்சாவூரை சரபோஜி மன்னர் ஆண்டுவந்தார். காசி யாத்திரை போக வேண்டும் என்று மன்னர் விரும்பினார். கங்கா ஸ்னானம் ஆனபிறகு கல்கத்தா கவர்னரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ராஜாங்க பிரதிநிதி சரபோஜியை சந்திக்க ஒப்புக்கொண்டார்.

தமிழகத்திலிருந்து வருகிற மன்னர் என்பதால் அவரிடம் பழைய தமிழ் நூல்கள் இருக்கிறதா? குறிப்பாக திருக்குறள் இருக்கிறதா? என்பதை கேட்க எண்ணினார் பிரிட்டிஷ் ராஜாங்க பிரதிநிதி. ஆங்கில மொழியில் திருக்குறளைப்பற்றி அவர் அறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

uvesaminathaaiyar1
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்

சரபோஜி மன்னர் கவர்னர் அலுவலகத்தில் கவர்னருடன் உரையாடிய பின்னர் விருந்து உண்டார். அப்போது கவர்னர் ஒரு கேள்வியை க்கேட்டார். உங்கள் ராஜாங்கத்தில் திருக்குறள் தமிழ்ப் பிரதி உள்ளதா? என்று வினவியது ம் சரபோஜிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை!

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

ஒரு பதிலை சாமர்த்தியமாகக் கொடுத்தார். பல நூல்கள் இருக்கின்றன தஞ்சாவூர் போனபின்பு பார்த்துவிட்டு தங்களுக்கு அவற்றின் நாமா வலியையும் தெரிவிக்கிறேன். திருக்குறள் தமிழ்ப் பிரதியைப் பற்றியும் விவரம் அனுப்புகிறேன் என்றார் சரபோஜி.

தஞ்சாவூர் வந்தது அவர் செய்த முதல் வேலை பல தமிழ் வித்வான்களை அழைத்து எங்கெங்கெல்லாம் தமிழ் ஓலைச்சுவடிகள் இருக்கிறதோ எங்கெங்கெல்லாம் நல்ல தமிழ் நூல்கள் இருக்கிறதோ அவைகளை எல்லாம் சேகரித்து நூல் நிலையத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்.

சரபோஜி மராட்டியர் என்பதால் அவருக்கு தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

uvesa iyer - 2026

பிரிட்டிஷ் கவர்னருக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற எண்ணிய சரபோஜி கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர் காரைக்குறிச்சி வேலாயுத உபாத்தியாயர் திருவேங்கடத்தா பிள்ளை சுப்புராய கவிராயர் வேங்கடாசலம் பிள்ளை ஆகிய தமிழ் வித்வான்களை தமிழ் இலக்கிய நூல்களை குறிப்பாக திருக்குறள் சம்பந்தமான தமிழ் நூல்களைச் சேகரிப்பதற்காக நியமித்தார்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தான் எந்த மண்ணை ஆளுகிறோமோ அந்த மண்ணின் இலக்கியத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை சரபோஜி உணர்ந்து கொண்டார்.

பல தமிழறிஞர்கள் எட்டுத்திக்கும் சென்று நூல்களைச் சேகரித்து அவற்றைக் கொண்டு வந்து சரஸ்வதி மஹாலில் சேர்த்தனர். திருக்குறள் பழைய பிரதிகளிலும் அப்படித்தான் சரஸ்வதி மஹால் வந்து அடைந்தது.

புதியதும் பழையதும் என்கிற நூலில் உவேசா மேற்கண்ட தகவலைத் தருகிறார். திருக்குறள் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் பின்னர் அலங்கரித்தது என்பது வரலாறு என்பதை உவேசா தெளிவுபட தன் கட்டுரையில் விளக்குகிறார்.

உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் – ஏப்.28 (1942)

  • கட்டுரையாளர்: கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
    (ஆசிரியர், கலைமகள் / மஞ்சரி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories