அச்சு ஊடகங்களுக்கு சோதனையான காலம்..

gokulam - 2026

கல்கி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் கோகுலம் இதழ்கள் இந்த மாதத்துடன் நிறுத்தப் படுகின்றனவாம்! கோகுலம் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே… போதுமான சர்குலேஷன் இல்லை என்று தெரிய வருகிறது. விற்பனைக் குறைவு என்பது, ஓர் அளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது!

வண்ணப் பக்கங்கள், கார்ட்டூன், படம் போட்டு வாங்குவது, ஓவியங்கள் என சிறுவர் இதழ்கள் அதிகம் வேலை வாங்குபவை, செலவைக் குடிப்பவை. ஆனால் விலை அதிகம் வைக்க முடியாது.

கோகுலம் தமிழ் ஆங்கிலம் இரண்டுமே மிகச் சிறந்த முறையில் குழந்தைகளுக்கான இதழ்களாக வெளிவந்தவை!

இன்றைய காலகட்டத்தில் விரல் விட்டு எண்ணும் சிறுவர் இதழ்களே வருகின்றன. அவற்றில் இப்போது இரண்டு குறைவு!

சுட்டி விகடன் – பல வித்தியாசங்களை, இலவசங்களை செயல்படுத்திப் பார்த்துள்ளது. ஆனால் இவற்றுக்கு எல்லாம் முன்னோடி – கண்ணன் – சிறுவர் இதழ்.

1950 முதல் 1972 வரை 22 வருடங்கள் இடைவிடாது வந்தது. ஆண்டு மலர் என தீபாவளி மலர்களுடன் கூட! அப்போது கண்ணனில் மாணவப் பருவத்தில் எழுதியவர்களே பிற்கால எழுத்தாளர்களாக மாறினார்கள். கண்ணன் கழகம் என தொடங்கி சட்டையில் மாட்டிக் கொள்ளும் பேட்ஜ் – அழகாக இருந்தது. சிறிய கோகுலக் கண்ணன் வரைபடத்துடன்! தொடந்து முதல் பக்கத்தில் மாணவ எழுத்தாளர் குறித்த சிறு குறிப்புகளுடன் ஊக்கப் படுத்தல் வேறு!

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இவற்றை எல்லாம் கலைமகள் நிறுவனத்தில் இருந்த போது ஆர்கிவ்ஸில் பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இன்றைய காலம்… மாறிவிட்டது. சிறுவர்களுக்கு தொலைக் காட்சியில் இருக்கும் ஆசை, படிப்பதில் இல்லை! படத்தைப் பார்த்து வண்ணம் தீட்டி மகிழ்வதும் படம் பார்த்து கற்பனையில் தாமாக கதைகளை உருவாக்கிச் சொல்வதிலும் திறன் குறைந்துவிட்டது. விளைவு – கற்பனைகளை வளர்த்தெடுக்கும் அச்சு ஊடகத்துக்கு வீழ்ச்சி!

அச்சு ஊடகம் – வளரும் தலைமுறையை தற்காலத்திய தொழில்நுட்ப உலகில் ஈர்க்கவில்லை அல்லது தேவைப் படவில்லை!

பள்ளி மாணவர்களுக்கு தற்போது யுடியூப் முறையில் பாடங்கள் கற்றுத் தரப் படுகின்றன. யுடியூப் தளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசின் சார்பிலேயே பாடங்கள் ஏற்றப் பட்டுள்ளன. இலவச லேப்டாப்.. பயனளிக்கிறது. வருங்காலத்தில் ஆசிரியர்களுக்கான தேவையும் கூட குறையக் கூடும்! ஸ்மார்ட்போன் இருந்த இடத்திலேயே அதைச் செய்யக் கூடும்!

கால மாற்றம் – தொழில்நுட்ப உலகம்…. அச்சு ஊடகத்துக்கு சோதனையான காலம்!

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories