February 20, 2026, 10:40 PM
27.3 C
Chennai

பாரதி-100: கண்ணன் பாட்டு- கண்ணன் என் குழந்தை!

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு பகுதி – 23
கண்ணம்மா – என் குழந்தை – விளக்கம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

என்பது வள்ளுவர் வாக்கு. அவ்வாறு தன்னுடைய பெண் பிள்ளையை ஊரார் மெச்சிப் புகழ்ந்தால், தாயானவள் மேனி சிலித்து, குழந்தையை உச்சி முகர்ந்து கர்வம் அடைவாளாம். குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால் போதை ஏறுகிறதாம். கட்டித் தழுவினாலோ பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடுகிறதாம். அந்தக் குழந்தை அழுது, அதனால் முகம் சிவந்தால் மனதில் சஞ்சலம் ஏற்படுகிறது. ஏதொ கவலையால் குழந்தையின் நெற்றி சுருங்கினால் தாயின் நெஞ்சம் பதைபதைக்கிறது.

நெற்றி சுருங்கியதற்கே அப்படியென்றால் உன் கண்ணில் நீர் வழிந்தால் தாயின் நெஞ்சில் இரத்தம் வருகிறதாம். அழவேண்டாம் என் மகளே நீ என் கண்ணின் மணி அல்லவா? நீ என் உயிரல்லவா? என தாய் புலம்புகிறாள்.

உன்னுடைய மழலை சொல்லாலே என் துன்பங்கள் எல்லாம் தீர்ந்துபோகும். உன் முல்லை சிரிப்பாலே என்னுள்ளே மூர்க்க குணமெல்லாம் தீர்ந்துபோகும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் “செங்கீரைப் பருவம்” என்று ஒரு பருவம் உண்டு. இவ்விலக்கியத்தின் இரண்டாவது பருவம் செங்கீரைப் பருவமாகும். இது குழந்தையின் ஐந்தாம் திங்களில் நிகழ்வதாகும்.

“கீர் என்பதற்கு சொல் எனப் பொருள் கொண்டு இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவம்” என்றும், “ஆடுக செங்கீரை எனப்பாடுவதால் குழந்தை ஒருகாலை உயர்த்தியும் ஒரு காலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடுதலாகிய பருவம்” என்றும், “அவ்வாறு ஆடும் பொழுது சுற்றத்தார் சிறந்த சொற்களை மழலை கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்” என்றும் கூறுவர்.

எடுத்துக்காட்டாக புலவர் செங்கைப் பொதுவன் எழுதியுள்ள கொங்குக் குமரி பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.

முப்பா லருந்திடும் மூரலின் திருவாயில்
முலைப்பால்முன் தேக்கெறித லால்
முத்துமணிக் காழ்வடம் முறைமலர் மாலைகள்
முழுதும் நனைந்தொழுகிடும்
அப்பால் அமிழ்தூறல் ஆறாய்ப் பெருகியே

அருகோடக் காவிரித்தாய்
அலைக்கைகள் ஏந்தியே ஆரப் பருகிடும்
அருமருந் தன்ன மகளே
தப்பாமல் செந்தமிழ் தன்னைப் பழகிடத்

தமிழ்மக ளாகவந்தாய்
தமிழவை தன்னிலுன் தலைவன் பயின்றதால்
தானே அமைந்து விடுமோ!
செப்பாமல் நீயிருந் தாலது வாராது

செங்கீரை யாடி யருளே
தேடாத வர்க்குமருள் செய்யும்கொங் குக்குமரி
செங்கீரை யாடி யருளே 12

நீ சொல்வதைப் போல இன்பக்கதைகளெல்லாம் கதைப் புத்தகங்கள் சொல்வதுண்டோ? அன்பைப் பொழிவதில் உன்னைப் போல ஒரு தெய்வம் உண்டோ? நான் நெஞ்சோடு அணிகின்ற வைரமலைகள் உனக்கு ஈடாகுமா? சிறப்பாக வாழ்வதற்கே உன்னைப் போல செல்வம் வேறு ஏதேனும் உண்டா?

இதனைவிட சிறப்பாக தன்னுடைய பென் குழந்தையைப் பற்றி ஒரு தாயால் சொல்ல முடியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories