உலக மொழிகளை இணைத்த கவிஞர்கள் சபை

  • ஜெயஸ்ரீ எம். சாரி

ஹைதராபாத்திலிருந்து இயங்கும் காவிய காமுதி அகில உலக கவிஞர்கள் குழுமமும், ஒடியாவில் இருந்து இயங்கும் இங்க் ட்யூ பப்ளிகேஷனும் இணைந்து சமீபத்தில் நடத்திய கவிஞர்கள் சபையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் கவிஞர்கள் பங்குகொண்டு கொண்டனர். கவிஞர்கள் பல மொழிகளிலும் தங்கள் கவிதைகளை வாசித்தது இலக்கியத்திற்கு ஒரு மகுடம் சூட்டுவதாய் இருந்தது.

டாக்டர் குமுத் பாலா, காவிய காமுதி குழுமத்தின் தலைவர், தன் தொடக்க உரையில் “இந்தக் குழுமமானது இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு சாதனமாக விளங்கியும், பல்வேறு மொழிகளை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவும், அனைத்து மொழிகளையும் பிரபல படுத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கின்றது. இந்தக் குழுமத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல்நாட்டு கவிஞர்களை உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தம் 39 இந்திய மொழிகளையும் 27 அயல்நாட்டு மொழிகளையும் இணைக்கும் பாலமாக இந்தக் குழுமம் உள்ளது. இங்க் ட்யூவின் மனோஜ் கிஷோர் நாயக் அவர்களின் ஒத்துழைப்பினால் காவிய காமுதியின் காலாந்திர காவ்ய தொகுப்பு வெளியிட முடிந்தது,”‘ என்றார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

காவிய காமுதி குழுமத்தின் தலைமை ஆலோசகரான ‘டக்லைன்” அலாபட்டி தன் உரையில் “ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது, ஒரு உச்சரிப்பு வகை உள்ளது.மேலும் பல மொழிகளை இந்தக் குழுமத்துடன் இணைக்க உள்ளோம்,” என்றார். அவர் தமிழ் மூதாட்டி அவ்வையாரின் ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதனை குறிப்பிட்டு புதிது புதிதாக கற்பதின் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்.

ஐந்து அமர்வுகளில் நடந்த கவிஞர்கள் சபையை எஸ் பி மஹாலிங்கேஸ்வரர், மண்டல செயலாளர், தென்னக மண்டல அலுவலகம், கேந்திரிய சாகித்ய அகாடமி, பெங்களூர், தொடங்கி வைத்தார். உதய்ஸ்ரீ, சாரதா சாய், ரமணி, டாக்டர் தீபிகா மற்றும் லக்ஷ்மி காயத்ரி ஆகியோர் பக்தி பாடல்களை அவரவர்கள் கலந்துகொண்ட அமர்வுகளில் பாடினர்.

பாலச்சந்தர் நாயர் (திருவனந்தபுரம்), லதாப்ரேம் சாகியா ( கேரளா), டாக்டர் பிரபா மஜும்தார் (அகமதாபாத்), உதயகுமார் (ஹைதராபாத்), டாக்டர் கே ஸ்ரீகாந்த் (மசூலிப்பட்டினம்), டாக்டர் மொய்லி ஜோசப் (கேரளா), டாக்டர் பூனம் நிகாம் சகாய் (ராஞ்சி), குல்னார் ரஹீம் கான் (சென்னை), டாக்டர் தீனதயாம் படையாட்சி (டர்பன்), டாக்டர் மரியா டோ சமேரியா (போர்ச்சுகல்), புஷ்மயோத்தி சுப்ருன் (மொரிஷியஸ்), டாக்டர் பிஎஸ் ஸ்ரீதரன் (கேரளா) கலீப்பதா கோஷ் (மேற்கு வங்காளம்) மற்றும் பீஸ்மா உபரேதி (நேபால்) ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவம், சிறப்பு விருந்தினர்களாகவும் ஐந்து அமர்வுகளாக கலந்துக் கொண்டனர்.

ALSO READ:  'அருந்தமிழ் 50' நூல் வெளியீடு

சுமார் 80க்கும் மேற்பட்ட கவிஞர்கள் தங்கள் கவிதைகளால் உலக மொழிகளை எல்லாம் அறிமுகப்படுத்தியும், உலக இலக்கியத்திற்கு ஒரு பாலமாக தத்தம் மொழிகளையும் சேர்த்தனர். ராஜீவ் முத்தேடத், டாக்டர் கவிதா சிங், சபிதா சாஹு, மஹுவா சென் மற்றும் சுதா குமாரி ஜுஹி ஆகியோர் முறையே ஐந்து அமர்வுகளில் நன்றியுரை வழங்கினர். டாக்டர் குமுத் பாலா அனத்து அமர்வுகளையும் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Entertainment News

Popular Categories