நூலகங்களுக்கு விநியோகம், வாசகர் வருகை குறைவு: எங்கே போகிறது தமிழ்நாடு?

தமிழர்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது! நல்ல நூல்களை, இதழ்களை, ஆரோக்கியச் சிந்தனைகளை வளர்க்கும் பதிவுகளை படித்து, அறிவை வளர்த்துக் கொள்வதும் ஞானம் கூடப் பெறுதலும் அருகி வருகிறது. உலகியல், ஆன்மிக அறிவு மங்கி… அரசியல், மதத் துவேஷ வெறி மதி மயக்கத்தால் கூடப் பெற்று வருகிறது!
விளைவு- விலை கொடுக்க வேண்டிய நிலை!
மக்கள் இப்படி இருக்க, அரசு அதற்குச் சளைத்ததா என்ன?
நூலகங்களுக்கான இதழ்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டன.

இந்த நிதியாண்டில் இருந்து தமிழ் இதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. 6 தமிழ் நாளிதழ்கள், 4 ஆங்கில செய்தித்தாள்கள், 12 வார மாத இதழ்கள் வாங்கும் நூலகங்களில் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாம்!

மேலும், கடந்த ஒன்றரை வருடங்களாகவே நூலகங்களுக்கு வழங்கப்பட்ட இதழ்களுக்கான தொகை, வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்களுக்கும் ஒரு வருட, ஒன்றரை வருட பாக்கி வைக்கப்பட்டிருப்பதும், காசு கமிஷன் கொடுத்து சரிக்கட்டினால் அப்படி இப்படி வளைந்து கொடுத்து காசோலையை வறண்டு போன பசுஞ் சோலையாய் கண்ணில் காட்டுவதும் எழுதப்படாத விதி ஆகியுள்ளது!
இதுதான் தமிழக அரசின் செயல்படாத லட்சணம்!

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

அதுபோல், நூல்கள் வாங்கப் பெறுவதும், நூல் பதிப்பாளர்களுக்கு பாக்கியைக் கொடுப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளதால், திண்டாட்டம் என்று சிலர் காதுபடவே சொல்கிறார்கள்!

அரசும் மக்களும் இவ்வளவு மோசமான மன நிலைக்குச் செல்வது, தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன என்று அன்று ஒருவர் சொன்னதன் இன்றைய கண்மேல் பலன் காட்சிகள்தான்~!

இதைச் சொன்னபோது, நண்பர்கள் சிலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஆனால், ”இது இன்று தோன்றிய நிலைமை அல்ல. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. பலன் இப்போது தெரிகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருமுன் அரசு நூலகங்களில் பெரும்பாலும் அண்ணா, பாரதிதாசன், தி.மு.கல், தி.க. அனுதாபிகள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நூல்களைத் திணித்தனர். மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூட் அவை திணிக்கப்பட்டன. நல்ல, தரமுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் புறக்கணிக்கப்பட்டன. அதே சமயத்தில்தான் தரம் கெட்ட வார இதழ்களும் வரத்துவங்கின. ஒரு காலத்தில் அற்புதமாக வந்து கொண்டிருந்த தினமணி, ஹிந்து பத்திக்கைகள் காலப்போக்கில் தரம் தாழ்ந்து போயின. ஆனந்த விகடனின் கதியும் இப்படியே. போதாக்குறைக்கு பாழாய்ப்போன டி.வி. சேனல்கள். காலை பத்து மணிக்கே சீரியல்களைத் துவங்கி விடுகின்றன. இதனால் குடும்பப் பெண்களுக்கிடையில் வார இதழ்கள் படிக்கும் வழக்கம் முற்றிலும் போயி விட்டது. ஒரு காலத்தில் கல்கியில் வெளிவரும் தொடர்களுக்காக ஆவலுடன் காத்திருப்போம். நூலகம் செல்லும் வழக்கம் குறைந்து போனதற்கு இப்போதுள்ள செல்போன், வாட்ஸ் அப், முக நூலகளும் காரணம். அதேபோல எழுத்தாளர்களிலும் தரமானவர்கள் குறைந்து விட்டார்கள்.” என்றார் நண்பர் கே.வி.சிவராமன்~!

ALSO READ:  நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

”இதில் மற்றுமொரு விடுபட்ட விஷயமும் உள்ளது. பொதுக்காரணிகள் அடிப்படையிலான cartel கள் இயங்குவதும், அவற்றின் குழு உறுப்பினர்கள் எழுதிய சுமாரான புத்தகங்கள் கூட பொது நூலகங்களிலும், பல்கலைக்கழக/கல்லூரி நூலகங்கள் மீதும் வலிந்து திணிக்கப்படுவதும் வாடிக்கையாகிப் போன சோகமும் இங்கு தான் நிகழ்ந்துள்ளது.” என்றார் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன்!

எங்கே போகிறது தமிழகம்!?

டாஸ்மாக் ஒன்றே வெறியா? குடிப்பது ஒன்றே குறியா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories