December 6, 2025, 12:18 PM
29 C
Chennai

காரைக்குடியில் கம் பன் திருவிழா ஏப்ரல் 7இல் தொடக்கம்

  
காரைக்குடி கம்பன்கழகம் சார்பில் கம்பன் திருவிழா ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்குகிறது.
 இதுகுறித்து கம்பன் கழக செயலாளர் பழ. பழனியப்பன் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்குடி தாய்க்கம்பன் கழகத்தின் 79 ஆம் ஆண்டுக் கம்பன் திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பேராசிரியர் தி. ராசகோபாலன் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் ந. விஜயசுந்தரி தொடக்க உரையாற்றுகிறார்.
  இதில், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் ப. பாண்டியராஜனுக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்படுகிறது. கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதிய மீனாட்சி- பழனியப்பா ஆய்வுச்சொற்பொழிவு நூலான “கம்பன் படைத்த கைகேயி‘ எனும் நூலை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வெளியிடுகிறார்.
  ஏப்ரல் 8ஆம் தேதி மாலை எழுத்தாளர் பழ. கருப்பையா தனிப்பேருரையும், கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது.  ஏப்ரல் 9ஆம் தேதி மாலை சொற்பொழிவாளர் சுகி. சிவம் நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடை பெறுகிறது.
  ஏப்ரல் 10ஆம் தேதி நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயில் என்று கூறப்படும் கம்பன் சமாதிக் கோயிலில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகிக்கிறார். திருச்சி இரா. மாது, தேவகோட்டை வி. யோகேஷ்குமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர். முடிவில் மு. பழனியப்பன் நன்றி கூறுகிறார்.
  மேலும், இந்த ஆண்டு கம்பன் கழகம் கூட்டும் நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கம் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கோட்டையூர் வள்ளல் அழகப்பர் இல்லத்தில் நடைபெறுகிறது. விழாவை செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா தொடங்கிவைக்கிறார். ராசா மணி முத்துகணேசன் வாழ்த்திப் பேசுகிறார். திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் சிறப்புரையாற்றுகிறார். அழகப்பரின் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராஜன் எழுதிய அரிய மாமனிதர் அழகப்பர் என்ற கவிதை நூலை வெளியிட்டுப் பேசுகிறார்.
  இவ்விழாவில் செட்டிநாட்டைச் சேர்ந்த இலக்கியங்கள், தமிழ் வளர்க்கின்ற நிறுவனங்கள் மடங்கள், கலைகள் என பல்வேறு தலைப்புகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழறிஞர்கள் ஆய்வேடுகள் வழங்குகின்றனர்.   நிறைவு விழாவுக்கு தஞ்சாவூர் இளவரசர் பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே சத்ரபதி தலைமை வகிக்கிறார். கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் நிறைவுரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories