காரைக்குடியில் கம் பன் திருவிழா ஏப்ரல் 7இல் தொடக்கம்

  
காரைக்குடி கம்பன்கழகம் சார்பில் கம்பன் திருவிழா ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்குகிறது.
 இதுகுறித்து கம்பன் கழக செயலாளர் பழ. பழனியப்பன் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்குடி தாய்க்கம்பன் கழகத்தின் 79 ஆம் ஆண்டுக் கம்பன் திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பேராசிரியர் தி. ராசகோபாலன் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் ந. விஜயசுந்தரி தொடக்க உரையாற்றுகிறார்.
  இதில், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் ப. பாண்டியராஜனுக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்படுகிறது. கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதிய மீனாட்சி- பழனியப்பா ஆய்வுச்சொற்பொழிவு நூலான “கம்பன் படைத்த கைகேயி‘ எனும் நூலை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வெளியிடுகிறார்.
  ஏப்ரல் 8ஆம் தேதி மாலை எழுத்தாளர் பழ. கருப்பையா தனிப்பேருரையும், கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது.  ஏப்ரல் 9ஆம் தேதி மாலை சொற்பொழிவாளர் சுகி. சிவம் நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடை பெறுகிறது.
  ஏப்ரல் 10ஆம் தேதி நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயில் என்று கூறப்படும் கம்பன் சமாதிக் கோயிலில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகிக்கிறார். திருச்சி இரா. மாது, தேவகோட்டை வி. யோகேஷ்குமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர். முடிவில் மு. பழனியப்பன் நன்றி கூறுகிறார்.
  மேலும், இந்த ஆண்டு கம்பன் கழகம் கூட்டும் நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கம் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கோட்டையூர் வள்ளல் அழகப்பர் இல்லத்தில் நடைபெறுகிறது. விழாவை செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா தொடங்கிவைக்கிறார். ராசா மணி முத்துகணேசன் வாழ்த்திப் பேசுகிறார். திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் சிறப்புரையாற்றுகிறார். அழகப்பரின் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராஜன் எழுதிய அரிய மாமனிதர் அழகப்பர் என்ற கவிதை நூலை வெளியிட்டுப் பேசுகிறார்.
  இவ்விழாவில் செட்டிநாட்டைச் சேர்ந்த இலக்கியங்கள், தமிழ் வளர்க்கின்ற நிறுவனங்கள் மடங்கள், கலைகள் என பல்வேறு தலைப்புகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழறிஞர்கள் ஆய்வேடுகள் வழங்குகின்றனர்.   நிறைவு விழாவுக்கு தஞ்சாவூர் இளவரசர் பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே சத்ரபதி தலைமை வகிக்கிறார். கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் நிறைவுரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருவதாக தெரிவித்தார்.
ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories