சென்னை
கோடை வெய்யில் இப்போது அதிகம் தலைக் காட்டி வருகிறது.
அண்மையில் சென்னையைப் புரட்டிப் போட்ட புயலில் மரங்கள் பல சாய்ந்து விட்டன. சென்னையை பசுமையாக்கி வைத்திருந்த மரங்கள் எல்லாம் அடியோடு சாய்ந்து கருகி விட்டதால், கோடை வெப்பத்தின் தாக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில், சித்த மருத்துவரான திருநாராயணன் திருப்பதி, கோடை வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ள சில வழிமுறைகளைத் தருகிறார்…
அவர் கூறுவது…
கோடையின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வேனல்கட்டிகள் , வேர்குருகள்,உடல் காங்கை என்று குழந்தைகளும் முதியவர்களும் வர ஆரம்பித்து விட்டனர்.
சென்னையை பொறுத்தவரை 100 ℉ தொடாவிட்டாலும் மரங்கள் விழுந்ததாலும் அதிக ஈரபதத்தினாலும் தாங்க முடியாதவாறு இருக்கிறது.
சந்தனாதி தைலம் தேய்த்து குளிப்பதுடன், வெட்டிவேர் ஊறிய நீர், எலுமிச்சை சாறு-சிறிது உப்பு சிறிது நாட்டு சர்க்கரை சேர்ந்து பருகவும்.
காலில் உப்பு சத்து குறைவினால் ஏற்படும் தசை பிடிப்பு வலி ஏற்படாமல் இருக்கும். திரிபலா சூரணத்தை தேய்த்து இரு முறை குளிக்க வேனல்கட்டிகள் , வேர்க்குருகள் கட்டுப்படும்.
சிறு குழந்தைகளுக்கு சந்தனம் அரைத்து பூசலாம். நன்னாரி என்ற பெயரில் மலை நன்னாரிதான் கிடைக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை சந்தனம் இல்லாவிட்டால் அதனையும் அரைத்து வேனல்கட்டிகளின் மேல் பூசலாம். அதையே பானமாகவும் பருகலாம்.
நன்னாரியில் உள்ள வேதிப்பொருட்கள் மலைநன்னாரி எனும் மாகாளி கிழங்கிலும் உண்டு . அதே மருத்துவ குணமும் உண்டு விரல்களுக்கு மருதாணி பூசவும் . சிறுநீர் எரிச்சலுக்கு மிளகு அளவு நல்ல சந்தனத்தை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
மருதாணி இலையை TEA டீ போன்று சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். குழந்தைகளின் உடலில் சிறு சிறு சிவப்பான நிறமாற்றம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். பகல் நேர வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.