தண்ணீர் விற்பனையை தடை செய்ய வேண்டும்!

எம்.லட்சுமிநாராயணன் (கட்டுரையாளர்: கட்டுமானப் பாதுகாப்பு ஆர்வலர்)

நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. இப்போது கோடைக்காலம் துவங்குகிறது. ஆனாலும்  கோடைக்காலம் முடிந்து பருவமழை நேரத்திலும் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியதை சென்ற வருடங்களில் பார்த்தோம். அப்படி இருக்கும்போது, இந்தக் கோடைக்காலத்தை எப்பாடி சமாளிக்கப் போகிறோம் என்பது நம்முன் உள்ள சவால்.

ஆடு மாடுகள் கால்நடைகள் குடிக்கக்கூட காசு கொடுத்து தண்ணீர் வாங்கவேண்டிய அவலம். பருவ மழை பொய்த்ததால் குடத்தால் தண்ணீர் விட்டாவது நெற்பயிரை காப்பாற்றிவிடமுடியுமா என்கிற பகீரத பிரயத்தனம். மணற்கொள்ளை, கழிவு நீர், இரசாயன விஷக்கழிவுகள், மனிதக்கழிவுகள் கலக்கும் கேடுகளால் இறந்து கொண்டிருக்கும் நதிகள்.

பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகவேண்டாம். தீர்வைச்சொல்லும் பிள்ளாய், என்று அனைவரும் ஆத்திரப்படுவது அவசரப்படுவது தெரிகிறது. இதற்கு அருமையான ஒரு தீர்வை இரண்டே ஆண்டுகளில் எட்டிவிட முடியும் என்றால் யார் இப்போது நம்ப போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எண்ணிய எண்ணியாங்கு செய்யும் திண்ணிய மனமுடையோர் நாம் என்பதை நிரூபிக்க, உலகிற்கே வழிகாட்ட இதுதான் தருணம்.

முதலில் நதிகள் கழிவுநீர்த்தடங்களாக மாறுவதை ஒரேயடியாக நிரந்தரமாக தடுப்பது எப்படி?

இன்றைய மனிதன் ஒவ்வொருவரும் தினசரி குறைந்தது 15 லிட்டர் நீரை இயற்கைக்கடன், குளியலுக்கு என்று கழிவு நீராக மாற்றுகிறான். ஆற்றில் குளத்தில் குளிப்பவர்கள் சற்று குறைவாகத்தான் மாசுபடுத்துவார்கள் என்று சிலர் கூறலாம். தூய நீருடன் ஒரு இடத்திலிருந்து புறப்படும் நதி, ஒரு குடியிருப்பு, கிராமம் அல்லது நகரத்தைத் தாண்டி வரும்போது அப்பகுதிகளின் மொத்த கழிவு நீரையும் உள்வாங்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளது. இரசாயன தொழிற்சாலைக் கழிவுகள், உலோகத் தொழிற்சாலை விஷக் கழிவுகள், நகராட்சி, மாநகராட்சி, பெரு நகர மக்களின் மனிதக்கழிவுகளைக் கொண்டுவரும் பாதாள சாக்கடைக் கழிவுகள் நதிகளில் நேரடியாக கலக்கின்றன. சில இடங்களில் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் வைத்திருக்கிறார்கள். சீனப்பெருஞ்சுவரைவிட நீளமான தடுப்புச்சுவர்கள் நாடெங்கிலும் கட்டினாலும் கூட தடுக்கமுடியாது என்பதுதான் நிஜம். கங்கை நதியை தூய்மையாக்க ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவானாலும் செய்யத்தயார் என்கிறது மத்திய அரசு. பல நாடுகள் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள தயார் என்று முன்வருகின்றன. கழிவுகள் கலந்தபின் மொத்த நதியையும் தூய்மையாக்குவது என்பது புராண கதையில் தேவர்களும் அசுரர்களும் வங்கக்கடலை கடைந்தது போலத்தான். ஒரு பகுதியில் சுத்தம் செய்தால் வேறொரு இடத்தில் நதி மாசடையலாம். ஊழல் மலிந்திருப்பதால் நதிகளைத் தூர் வாருகிறோம் என்று சொல்லி காசை வாரிவிடுவார்கள். வேறு என்ன தான் செய்வது?

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

நதிகளின் இரு கரைகளிலும் நதியின் போக்கிலேயே இரண்டு இரட்டைக் குழாய்களைப் பதிக்கவேண்டும். ரயில்வே தண்டவாளம் போன்று. நதிக்கு இணையாகவே செல்லும் இந்த இரட்டைக் குழாய்களுக்கு நடுவில் நதி பயணிக்கும்படி குழாய்கள் அமையவேண்டும். ஆற்றங்கரையைவிட குழாய் மட்டம் சிறிது தாழ்ந்து இருக்கவேண்டும். நதியில் கலக்க வரும் கழிவுகள் முதல் குழாயில் புகுவதற்கு வழி அமைக்கப்படும். எங்கெங்கெல்லாம் கழிவு நீர் வருகிறதோ, அது முதல் குழாயிலேயே புகும். ஆற்றின் போக்குப்படியே குழாய்கள் பதிக்கப்படுவதால் கழிவு நீர் தங்கு தடையின்றி குழாய் வழியாக பயணிக்க ஏதுவாகும். குழாயின் ஒருபுறத்தில் உள்ளே புகும் கழிவு நீர்  அடுத்த இடத்தில் புக இருக்கும் துவாரம் வழியாக  வெளியேறாமல் இருக்க, ஒருவழிப்பாதை வால்வு தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் பல இடங்களிலிருந்தும் குழாயில் புகும் கழிவு நீரை குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு அளவுள்ள வடிகட்டிகள் அமைத்து திடக்கழிவுகளை முதலில் அகற்றிவிடவேண்டும். இவ்வாறு திடக்கழிவு நீக்கப்பட்ட நீர் இணையாக இருக்கும் மற்றொரு குழாய்க்குள் செலுத்தப்பட வேண்டும். அந்த நீரை குறிப்பிட்ட மைல்கள் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ள சுத்தகரிப்பு நிலையங்களில் சுத்தப்படுத்தப்பட்டு ஏரிகள், குளங்கள், குட்டைகள், சிறிய நீர் நிலைகளில் தேக்கியது போக மீதியை பாசனத்திற்கு திருப்பி விடவேண்டும். இதன் மூலம் பெருவாரியான தரிசு நிலங்களைக்கூட விளைநிலங்களாக ஆக்க முடியும். சுத்தப்படுத்தப்பட்ட இந்த நீர் நமது பாசன தேவை அளவுக்கு நிகராக இருக்கும். கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுவதால், நதிகள் உடனடியாக தாமாகவே சுத்தமாகிவிடும்.  நதி நீரைவிட கழிவு நீர் அதிகம் இருந்தால் குழாய்களின் எண்ணிக்கையை அதிகமாகுவதன் மூலமோ, வடிவில் பெரிய குழாய்களைக்கொண்டோ அல்லது கூடுதல் சுத்தகரிப்பு நிலையங்களை அமைத்தோ சமாளித்து விடலாம். கழிவு நீர் கலந்த மொத்த நதி நீரையும் சுத்தமாக்குவதென்பது விழலுக்கு நீர் பாய்ச்சுவதைப் போன்றதாகும். அதுமாதிரி முயற்சியில் நாம் இறங்கக்கூடாது. ரியல் எஸ்டேட் அசுர வளர்ச்சி மூலம் அழிக்கப்பட்டு வரும் விளை நிலங்களுக்கு ஈடாக அதைவிட அதிகமான தரிசு நிலங்களை பாசனம் மூலம் விளை நிலங்களாக மாற்றமுடியும். மிக முக்கியமாக நதி நீரை குடிநீர்த் தேவைக்கு மட்டும் பயன்படும்படி ஆக்கவேண்டும். ஆழ்துளைக் கிணறுகளுக்கு அனுமதி கொடுக்காமல் குட்டைகள், குளங்கள், ஏரிகளை 100 நாட்கள் வேலைத்திட்ட மக்கள் உதவியுடனும் அரசு மானியத்துடனும் அமைக்க வேண்டும்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

வெல்வதற்கு பகைவர்களோ வேறு அண்டை நாடுகளோ இல்லாமல் போனதால், இராஜேந்திர சோழன், படை வீரர்களைக் கொண்டு வீராணம் ஏரியை வெட்டி உருவாக்கியதாக அறிகிறோம். அது 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று மாபெரும் சென்னை நகருக்கே குடிநீர் தரும் அட்சய பாத்திரமாக திகழ்வதைக் காண்கிறோம். ஒரு மாநில அளவுள்ள பகுதியை மட்டுமே ஆண்ட சோழ மன்னன் செய்ததை மாபெரும் இந்திய சாம்ராஜ்யம் செய்ய முடியாதா? முடியும்! முடியும்!! முடியும் என்பதே உண்மை.

கழிவுநீர்த் தடுப்புக்குழாய்கள், சுத்தகரிப்பு நிலையங்கள் அமைப்பது நிரந்தரத் தீர்வு மட்டுமல்ல ஒருமுறை மட்டும் செய்யப்படும் செலவுதான். பராமரிப்பு + செயலாக்கத்திற்கு ஆகும் செலவை விட பயன் அதிகம். தரை நீர் மட்டம் உயரும். மின்சாரப் பயன்பாட்டளவு மிகவும் குறையும். சேமிப்பாகும் மின்சக்தி நாட்டின் உற்பத்தியை பெருக்க உதவும். விளை நிலங்கள் பெருகும். கூவம் நீரையே குடி நீராக்கமுடியும் என்றால் நமக்கு வேறென்ன வேண்டும்? அண்டை மாநிலங்களையே நம்பியுள்ள  நம் தமிழகம், ஏன் நாமே  நமக்கு என்ற கோட்பாட்டை உருவாக்கிக்கொள்ள முடியாது? குடி நீர்த் தேவை போக எஞ்சியுள்ள நதி நீரை அரபு நாடுகளுக்கு அனுப்பி பெட்ரோலியத்தை மாற்றாக பெறலாம். அரபு நாடுகள் கடல்நீரை குடி நீராக ஆக்க மிக அதிகம் செலவழிக்கிறார்கள்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

நாம் நம் உள்நாட்டில் காசுக்கு தண்ணீர் வாங்குவது என்ற அநியாயத்தை தொடரவிடக்கூடாது. பாட்டிலில், கேனில், லாரியில் எந்த உருவிலும் தண்ணீரைக் காசாக்க விட அனுமதிப்பது பாபகரமான செயலாக கருதப்பட வேண்டும். ஒரு காலத்தில் உணவையே தானமாகத்தான் கொடுக்க வேண்டும், விற்கக்கூடாது என்ற நியதி கடைப்பிடிக்கப்பட்டது நம் பாரத  நாட்டில்தான். பிரயாணிகள் வசதிக்காக குறைந்த விலையில் தொடங்கப்பட்ட உணவு விற்பனை தற்போது முன்னணி வியாபாரங்களில் ஒன்று. அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் தண்ணீர் வியாபாரம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.

காசைத் தண்ணீராக வீணடிப்பதாக பெரியவர்கள் முன்பு கூறுவதைக் கேட்டிருப்போம். இன்று தண்ணீரை காசைப்போன்று பாதுகாத்து சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

Author email id: m_lakshyan@rediffmail.com

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories