“திருச்செந்தில் வேலா”

Published:

tiruchendur murugan - 2026

(காவடிச் சிந்து)

வேல்முருகா என்றுசொல்லும் போது  – நல்

   வித்துடனே சேதிதரும் தூது – ஒரு

   சேவலுடை நற்கொடியை

   காவலுடன் தந்தவனைத்

   தேடு -மனத்

   தோடு.

 

பால்குடங்கள் ஏந்திவரும் வேளை – குகன்

   பாசத்தினால் மறக்கிறேன் நாளை – சுவைப்

   பானகமாய் வாய்மணக்க

   ஞானமொழி சொன்னவனைப் 

   பாடு- சுருதி

   யோடு.

 

மாலவனின் சோதரியாம் சக்தி – தன்

   மகனுக்காய்த் தந்தவேலே சக்தி – வீண்

   மாகவலை தீர்ப்பதற்கு

   மோகவலை வெல்வதற்கு

   மண்ணில் – இல்லை

   எண்ணில்.

 

ஆலமரம் போலவுண்டு வம்சம் – அதன்

   ஆணிவேரே வேலவனின் அம்சம் – அந்த

   அற்புதத்தின் தீப்பிழம்பைச்

   சொற்பிடித்து வாழ்த்திடத்தான்

   ஆசை – நப்

   பாசை .

 

– மீ.விசுவநாதன்

 

 (இன்று (07.06.2017) திருமுருகனுக்கு உகந்த  வைகாசி விசாகத் திருநாள்) 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img