
(காவடிச் சிந்து)
வேல்முருகா என்றுசொல்லும் போது – நல்
வித்துடனே சேதிதரும் தூது – ஒரு
சேவலுடை நற்கொடியை
காவலுடன் தந்தவனைத்
தேடு -மனத்
தோடு.
பால்குடங்கள் ஏந்திவரும் வேளை – குகன்
பாசத்தினால் மறக்கிறேன் நாளை – சுவைப்
பானகமாய் வாய்மணக்க
ஞானமொழி சொன்னவனைப்
பாடு- சுருதி
யோடு.
மாலவனின் சோதரியாம் சக்தி – தன்
மகனுக்காய்த் தந்தவேலே சக்தி – வீண்
மாகவலை தீர்ப்பதற்கு
மோகவலை வெல்வதற்கு
மண்ணில் – இல்லை
எண்ணில்.
ஆலமரம் போலவுண்டு வம்சம் – அதன்
ஆணிவேரே வேலவனின் அம்சம் – அந்த
அற்புதத்தின் தீப்பிழம்பைச்
சொற்பிடித்து வாழ்த்திடத்தான்
ஆசை – நப்
பாசை .
– மீ.விசுவநாதன்
(இன்று (07.06.2017) திருமுருகனுக்கு உகந்த வைகாசி விசாகத் திருநாள்)



