“ஞானகுரு பாரதிசொல் மாறாதே”

Published:

bharathi - 2026

நல்லோரை வாயாரப் பாராட்டு – நாடு
நலம்பெறவே உழைப்போரைச் சீராட்டு
பொல்லாரைப் பொய்யாரைக் கூடாதே – அவரைப்
புகழ்வோரின் பக்கமும்நீ போகாதே.

தேசத்தின் ஆற்றுமணல் அள்ளாதே – அத்
திருடர்கள் உதவியைநீ நாடாதே
காசுக்காய் மானத்தைத் தள்ளாதே – உயர்
காரியத்தில் பின்வாங்கிப் போகாதே

ஓட்டுக்காய் கைக்கூலி வாங்காதே – மன
உண்மைக்கு மாற்றாகப் பேசாதே
நாட்டுக்காய் பக்திசெயச் சொன்னவனாம் – நம்
ஞானகுரு பாரதிசொல் மாறாதே.

பாரதியார் நற்கவிதை கட்டுரைகள் – தினம்
படிக்கின்ற தோர்பழக்கம் கொண்டுவிட்டால்
பேரமைதி கொண்டுநாம் வாழ்ந்திடலாம் – ஒர்
பின்னடைவும் இல்லாமல் ஓங்கிடலாம்.

  • கவிதை: மீ.விசுவநாதன்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img