சிவாஜியின் தீரமெங்கே! வாஞ்சியின் வீரமெங்கே!

Published:

ramalingam - 2026

அல்லாவை ஏற்பேன் என்றான்
குல்லாவை தலையில் ஏற்றான்
சமத்துவமாய் வாழும் நிலையில்
சர்ச்சைகளை தவிரும் என்றான்

உன் மதம் உனக்கு உயர்வு
என் மதம் எனக்கு உயர்வு
ஏழை மனதை மாற்றும் நோக்கில்
ஈனச் செயல் செய்யாதே என்றான்

மதம் மாற்றும் எண்ணத்தை விட்டு விட்டு
தேசம் உயர்த்தும் பணியை செய்ய வா
என்று அன்போடு அழைத்தான்
வளர்ச்சிக்கு துணையிரு, தோள் கொடு என்றான்

வாடகைக்கு வந்த கூட்டம் நீங்கள்
வசதிக்கு என்ன குறை,
வாய்ப்புகள் பல இருந்தும்,
மதவெறி ஏன் என்றான்

என் மதம் கற்றுக் கொடுத்த
நல்லிணக்கம்
உன் மதத்தில் ஏன் இல்லை என
ஓங்கி ஒலித்தான்

சுற்றி நின்ற குள்ளநரிக் கூட்டத்தை
சுற்றம் என கணக்கு போட்டான்
சுற்றி வர ஆகும் கணப் பொழுதில்
சுற்றி வளைக்கப்பட்டான், வெட்டுப்பட்டான்

கை பிடித்து இழுத்தானா,
காமுகனாய் இருந்தானா,
கள்ளத்தனம் செய்தானா,
எவர் வயிற்றிலும் அடித்தானா
என்ன தவறு செய்தான்
என் இந்து சொந்தம் ராமலிங்கம் ?

இது நம் நாடென நினைத்தோமே,
நல்லவர் ஆட்சி என கொண்டோமே
நானிலமும் நம் மேன்மையை
ஏற்கும் நாள் நம் காலத்தில் காண்போம் என
இறுமாப்பு கொண்டோமே

பேய்கள் ஆட்சி செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்
என்பது இதுதானா?

ஆயிரம் ஆண்டுகளாய்
அடிமைப்படுத்தியவனை
அடித்து விரட்டிய வீர சிவாஜி
வம்சம் எங்கே?
ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற
வாஞ்சிநாதன் வீரம் எங்கே?

அப்சல் கான்களும், ஒளரங்கசீப்புகளும்
அவதாரம் எடுக்க இந்த மண் அரபு தேசமல்ல

இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
மகான்கள், சித்தர், வீர புத்திரர்கள் அவதரித்த
பூமியிது,
இன்றும் கூட வீரத் துறவிகள் வழிநடத்தும்
வேத பூமியிது

அடித்து நொறுக்க ஆணையிட யாரும் வேண்டாம்
ஆருயிர் சோதரனை, ராமலிங்கத்தை மனதில் வைத்தால்,
தேசமும் தெய்வமும் காக்கப்பட வேண்டும் என பகுத்தறிந்தால்,
புல்லுறுவிக் கூட்டத்தை பிடுங்கி எறிய பலம் கூடும்,
தலைமுறைகள் காக்கப்படும் சந்ததிகள் நமை வாழ்த்தும்

பதிவோம் நம் கண்டனங்கள்
எழுப்புவோம் தூங்கும் மானிடர்களை
புயல் என புறப்படட்டும்
புதுயுகம் படைக்கட்டும்…

  • எழுதியவர் யாரோ? இணையத்தில் வைரலாகும் கவிதை!

Related articles

Recent articles

spot_img