நெல்லை, தென்காசி மாவட்ட கிராமங்கள் குறித்து, தமிழக அரசு ஆணை வெளியீடு!

Published:

tenkasi district - 2026

நெல்லை தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு ஆணை வெளியிடப் பட்டுள்ளது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் திசையன்விளை ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி வருவாய் கோட்டங்களுடன் நெல்லை மாவட்டம் இயங்கும்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் புதிய வருவாய் கோட்டமான சங்கரன்கோவில் ஆகியவற்றுடன் தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட 8 தாலுக்காக்களை கொண்டு இயங்கும்.

தென்காசி தாலுகா மறு சீரமைப்பு செய்யப்பட்டு அதில் கடையம் (12 கிராமம்), ஆழ்வார்குறிச்சி 13 கிராமம், கல்லூரணி (11 கிராமம்), தென்காசி 11 கிராமம் என தென்காசி வருவாய் கோட்டத்துடனும்,

தென்காசியுடன் இணைக்கப்பட்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் சங்கரன்கோவில் (6 கிராமம்), குருக்கள் பட்டி (9 கிராமம்), சேர்ந்தமங்கலம் (5 கிராமம்), கரிவலம்வந்தநல்லூர் (9 கிராமம்) வீரசிகாமணி (6 கிராமம்) என 35 வருவாய் கிராமங்களுடனும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் இயங்கும்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

வன்னிகோனேந்தேல் பிர்கா சங்கரன்கோவில் தாலுகாவில் இருந்து பிரிக்கபட்டு நெல்லை மாவட்டத்தில் இயங்கும்.

பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கான செயல்பாடுகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரி ஆகியோர் உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்தது உத்தரவு.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img