December 6, 2025, 11:59 AM
29 C
Chennai

ஆமா.. தலைவருக்கான வெற்றிடம்… அதை ரஜினி நிரப்புவார்: மு.க. அழகிரியின் பதில்!

azhagiri - 2025
file picture

தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது அதை ரஜினி நிரப்புவார் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி!

நடிகர் ரஜினி காந்த் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னமும் இருக்கிறது என்றார்.

கருணாநிதி, ஜெயலலிதா என பெரிய தலைகள் எல்லாம் மறைந்த பின்னர், அந்த இடத்தை நிரப்ப சரியான தலைமை தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை என்று பலரும் தெரிவித்த கருத்தை அடியொற்றி, ரஜினியும் அவ்வாறே கூறினார். ஆனால், இதற்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர், தலைமைக்கான வெற்றிடத்தை முதல்வர் இபிஎஸ் நிரப்பிவிட்டார் என்றனர்.

அதே போல், தங்கள் பங்குக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றார். இப்படி வெற்றிடங்கள் நிரப்பப் படுவது இரு தரப்பாலும் தொடர்ந்து கூறப் பட்டு வந்த நிலையில், வெற்றிடம் குறித்த கருத்து மட்டும் தமிழகத்தில் நின்ற பாடில்லை. அவரவர் தங்களுக்குத் தோன்றிய படி எல்லாம் வெற்றிட நிரப்பல் குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

m k azhagiri - 2025

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்திருந்த மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மை தான். ரஜினி வருவார், அந்த வெற்றிடத்தை நிரப்புவார்” என்றார்!

மு.க.அழகிரி ஏற்கெனவே நடிகர் ரஜினியின் நண்பர்தான். முன்னதாக இதே போன்று ரஜினி கட்சி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். ஆயினும், கருணாநிதியின் மகனான அழகிரி, கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று கூறி வந்தார். காரணம், திமுக.,வின் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபோது, அவரது கருத்து இவ்வாறு இருந்ததுதான்!

இந்நிலையில், தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று கூறி, அழகிரி திமுக.,வுக்கு வழக்கம் போல் கடுக்காய் கொடுத்துள்ளார். இந்த நிலையில், எந்தக் கட்சியிலும் இல்லாமல் அரசியல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் அழகிரி, ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் அதில் போய் சேருவார் என்று பதிலுக்கு கருத்துகளை அவிழ்த்து விடத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories