February 20, 2026, 10:52 PM
27.3 C
Chennai

மத நல்லிணக்கத்திற்கு எதிராக விஷ விதையை விதைக்கும் ஸ்டாலின்! அமைச்சர் ஜெயக்குமார்!

jeyakumar - 2026

மு.க.ஸ்டாலினுக்கே இப்போது தலைவர் உதயநிதிதான் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை, மூலக்கொத்தளத்தில் தனியார் அமைப்பு சார்பில் இன்று (டிச.21) 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் முயற்சி, அண்ணா பெயரை அகற்றுவதற்காக என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே?

குறுகிய சிந்தனை கொண்டவர்களின் மனதில்தான் இத்தகைய எண்ணம் ஏற்படும். அண்ணாவின் புகழை நேற்று, இன்று, நாளை என்றைக்குமே கட்டிக் காக்கும் இயக்கம் அதிமுக. தன் கட்சியின் கொடியிலேயே அண்ணாவைப் பதித்தவர் எம்ஜிஆர்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மூவரின் எண்ணங்களில்தான் அதிமுக நடை போடுகிறது. ஆனால், திமுக அண்ணாவையும் பெரியாரையும் மறந்துவிட்டது. அந்தத் தலைவர்களையெல்லாம் ஸ்டாலின் மறந்துவிட்டார்.

அவருடைய மனதில் இருப்பவரெல்லாம் அவரின் அருமைப் புதல்வன் உதயநிதிதான். இப்போது ஸ்டாலினுக்கே தலைவர் உதயநிதிதான். அண்ணா தலைவர் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவருடைய அப்பா கருணாநிதியே தலைவர் கிடையாது. அவருடைய கவலையெல்லாம் உதயநிதி மீதுதான்.

அண்ணா எங்களுடன் இருக்கின்றார். அவருடைய பெயர் நிலைத்து நிற்கும் வகையில்தான் அதிமுக ஆட்சி இருக்கும்.

இது திசை திருப்பும் முயற்சி. திமுகவின் முகத்தில் கரியைப் பூசும் விதத்தில்தான் அதிமுகவின் முயற்சி இருக்கும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளதே?

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. மேற்கொண்டு அதில் கருத்து சொல்ல முடியாது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்திருக்கிறது. குடிமகனாவதற்கு வழக்கமான ஆதாரங்கள் இருந்தாலே போதும் என கூறியிருக்கிறது.

தமிழ்நாடு அமைதி நிலவும் மாநிலம். இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாபர் மசூதி பிரச்சினையின்போது பல மாநிலங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன.

தமிழகத்தில் ஒன்றும் நடக்கவில்லை. இங்கு முஸ்லிம், கிறிஸ்தவர் என எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு தமிழ்நாடு. இது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதையை விதைப்பதற்காக சதிகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories