February 10, 2025, 9:38 AM
27.8 C
Chennai

செய்தியாளர் கேள்வி! அமைச்சர் பாண்டியராஜன் விரக்தி!

ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாட உள்ளார். இந்நிலையில் ஜன. 16-ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாற்ற உள்ளது குறித்து செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் விரக்தியுடன் ஏதோ பதிலளித்துச் சென்றார்.

வரும் ஜன.16 ஆம் தேதி, வானொலி, டிவி., ஆகியவற்ற்ன் வழியே, பிரதமர் மோடி மாணவர்களுக்கான உரை நிகழ்த்த உள்ளார். இதனை மாணவர்கள் அவசியம் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இது ஓர் அரசியல் சர்ச்சையாக திமுக.,வினால் தமிழகத்தில் உருமாறியுள்ளது.

இந்த நிலையில், மாநில அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், பிரதமர் மோடியின் உரை இந்தி மொழியில் இருக்குமே! அதை தமிழக மாணவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜன. 16-ஆம் தேதி, மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசுவதை விருப்பம் இருந்தால் பாருங்கள்; இல்லாவிட்டால் சேனலை மாற்றி விடுங்கள் என விரக்தியில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

பொதுவாக, மாதந்தோறும் ஒலிபரப்பாகும் மோடியின் மன் கி பாத் என்பது, மோடியின் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியாக தமிழாக்கம் செய்யப் பட்டு, தமிழில் சென்னை வானொலியால் ஒலிபரப்பப் படுகிறது. மன் கி பாத் நிகழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும், அந்த அந்த மாநிலங்களில் உள்ள மொழியில் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒலிபரப்பாகிறது.

அதுவே டிவி.,யிலும் செய்யப் படுகிறது. இது போல், பிரதமரின் முக்கியமான அனைத்து உரைகளுமே மாநில மொழிகளில் உடனுக்குடன் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒலிபரப்பாகி விடுகின்றன.

இந்த நிலையில், திமுக.,வின் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டு, அதற்காகவே மேலும் சர்ச்சையைக் கிளப்ப, ஒரு செய்தியாளர் வேண்டுமென்றே இவ்வாறு கேட்டது, அமைச்சர் பாண்டியராஜனை மேலும் விரக்தி அடையச் செய்துவிட்டது என்றே கூறப்படுகிறது.

உண்மையில், பிரதமர் உரையின் மொழி மாற்றம் குறித்து செய்தியாளர் அறிந்திருக்கிறாரா? அவ்வாறு இல்லை என்றால், எப்படி அவர் ஒரு செய்தியாளராக இருக்க முடியும் என்றெல்லாம் இப்போது சமூகத் தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Topics

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories