December 5, 2025, 12:39 PM
26.9 C
Chennai

செய்தியாளர் கேள்வி! அமைச்சர் பாண்டியராஜன் விரக்தி!

14 June13 pandiyarajan minister - 2025

ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாட உள்ளார். இந்நிலையில் ஜன. 16-ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாற்ற உள்ளது குறித்து செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் விரக்தியுடன் ஏதோ பதிலளித்துச் சென்றார்.

வரும் ஜன.16 ஆம் தேதி, வானொலி, டிவி., ஆகியவற்ற்ன் வழியே, பிரதமர் மோடி மாணவர்களுக்கான உரை நிகழ்த்த உள்ளார். இதனை மாணவர்கள் அவசியம் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இது ஓர் அரசியல் சர்ச்சையாக திமுக.,வினால் தமிழகத்தில் உருமாறியுள்ளது.

இந்த நிலையில், மாநில அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், பிரதமர் மோடியின் உரை இந்தி மொழியில் இருக்குமே! அதை தமிழக மாணவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜன. 16-ஆம் தேதி, மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசுவதை விருப்பம் இருந்தால் பாருங்கள்; இல்லாவிட்டால் சேனலை மாற்றி விடுங்கள் என விரக்தியில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

பொதுவாக, மாதந்தோறும் ஒலிபரப்பாகும் மோடியின் மன் கி பாத் என்பது, மோடியின் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியாக தமிழாக்கம் செய்யப் பட்டு, தமிழில் சென்னை வானொலியால் ஒலிபரப்பப் படுகிறது. மன் கி பாத் நிகழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும், அந்த அந்த மாநிலங்களில் உள்ள மொழியில் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒலிபரப்பாகிறது.

அதுவே டிவி.,யிலும் செய்யப் படுகிறது. இது போல், பிரதமரின் முக்கியமான அனைத்து உரைகளுமே மாநில மொழிகளில் உடனுக்குடன் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒலிபரப்பாகி விடுகின்றன.

இந்த நிலையில், திமுக.,வின் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டு, அதற்காகவே மேலும் சர்ச்சையைக் கிளப்ப, ஒரு செய்தியாளர் வேண்டுமென்றே இவ்வாறு கேட்டது, அமைச்சர் பாண்டியராஜனை மேலும் விரக்தி அடையச் செய்துவிட்டது என்றே கூறப்படுகிறது.

உண்மையில், பிரதமர் உரையின் மொழி மாற்றம் குறித்து செய்தியாளர் அறிந்திருக்கிறாரா? அவ்வாறு இல்லை என்றால், எப்படி அவர் ஒரு செய்தியாளராக இருக்க முடியும் என்றெல்லாம் இப்போது சமூகத் தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories